Skip to main content

Posts

Showing posts from October, 2025

ஒரு செடியின் கல்லறை

ஒரு செடியின் கல்லறை  -------------------------- நான் வேலைக்குச் செல்லும் போது தினமும் பார்க்கும் காட்சி , அடுத்த வீட்டு ஓனரின் அப்பா ஒரு ஹோஸ் பைப்பை கையில் வைத்து தெருவெல்லாம் தண்ணீர் ஒட வைப்பார். அது போல் எல்லா வீடுகளிலும் ஏதோ ஒரு அம்மாவோ, பாட்டியோ செடிக்குத் தண்ணீர் விட்டுக் கொண்டிருப்பார் . இங்கு எல்லார் வீட்டு வாசலிலும் பூச்செடிகள் இருக்கின்றன. விரித்த பசும்புல் பாயில் இடையில் செடிகள் அமர்ந்திருக்கும். சில நின்றபடி இருக்கும். சில செடிகள் தவழ்ந்தபடி இருக்கும்  . சில நீராய் வழி தேடி தரையில் ஓடியபடி இருக்கும். சில கொடியாய் , மேகமாய் , பறவையாய் வானில் வழி கேட்டு நிற்கும். இதற்கெல்லாம் இடையில் சிலையாய் ஒரு மரம். ஆனால் எல்லாவற்றிலும் தலையில் பூக்கள். ரோஜாவும், கேந்தியும் , செம்பருத்தியும், குல்மோகர், குறிப்பாய் ஆப்ரிக்கன் துலிப். இந்த ஊரின் செங்காந்தள். மரமே கனன்று எரிவது போல் இருக்கும். அப்புறம் அந்த யானைக் காதுகள் போல் இலைகளை மெலிதாய் ஆட்டியபடி இருக்கும் அந்தச் செடி. கட்டிப் போட்ட நாயாய் , கைப்பிள்ளையாய்  சிறிய, பெரிய தொட்டிகளில் வளரும் செடிகள். தலையிலும் இடுப்பிலும் ஏறி ...

கவிதை - ஒரு சுய புரிதல்

கவிதை ஒரு சுய புரிதல்  மரபு இலக்கியம் வாசிக்கும்போது நம்மாலும் இப்படி எழுத முடியுமா என்று ஆசை எழுகிறது. மனுஷ்ய புத்திரன் , விக்ரமாதித்யன் , கல்யாணி, கலாப்ரியா போன்றவர்களின் கவிதைகளை விரும்பிப் படிப்பேன். முன்னெல்லாம் தேவ தேவன் பிடிபடக் கடினமாக இருந்தன. இப்போதெல்லாம் பரவாயில்லை. ஆனால் அவர் சொல்லும் வால்ட் விட்மன் போன்ற ஆங்கிலக் கவிஞர்கள் படித்ததில்லை. இப்போது ஒரு ஆர்வம் வருகிறது, இதற்கெல்லாம் காரணம் கம்ப ராமாயணம் படிக்க ஆரம்பித்ததே என நினைக்கிறேன்.கம்பன் என்றால் கற்பனை, காட்சிப் படுத்துதல், மொழி அழகு, நாடகத் தருணங்கள், நாலு வரிக்குள்ளும் இருக்கும் மிக நுண்ணிய விவரணைகள் என்று சொல்வேன். இதை ஏன் (இன்னும் முதல் புத்தகம் மட்டுமே ) எனக்குப் படிக்கத் தோன்றுகிறது என்றால் 'செஞ்சொற் கவி இன்பம்' என்பதே. படித்ததும் ஒரு உவகை ஏற்படுகிறது. இதையே தேவதேவன் தன்னுடைய கவிதை பற்றி என்ற நூலில் கவி அனுபவம் என்கிறார். ஏனோ சில நாட்களாக இதிலேயே மனம் செல்கிறது. இப்போதெல்லாம் வண்டியில் செல்லும் போதும் வரும் போதும் பெரும்பாலும் கிண்டிலில் கவிதையே படிக்கிறேன். கவிதை படித்துப் பின் வருவதை இது ஒரு போதை போல என்...