Skip to main content

Posts

Showing posts from August, 2025

சில கவிதைகள்

1. கடுமையான டிராபிக் ஜாமில்  ====================== கடுமையான டிராபிக் ஜாமில்  என்ன செய்யலாம்  நிறைய தண்ணீர் நிறைத்துவைத்து  இடையிடை அருந்தலாம்  யாருக்காவது போனை முடுக்கி  வலியப்  பேசலாம்  வண்டியை ஓரமாய் நிறுத்தி    ஆசுவாசமாய் சிறுநீர் கழிக்கலாம்  'துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க' கேட்கலாம்  இல்லை விக்ரமாதித்யனின்  ஆழித்தேர் கவிதை படிக்கலாம்  வீடு சேர்ந்ததும் வெந்நீரில் குளித்து  எல்லாம் மறக்கலாம் 2. சமரசம் உலாவும் இடம்  =================== சாம்பல் வெள்ளை சிவிகையில் (பென்ஸ்) செல்பவர்கள்  நிரந்தர சல்லியர்கள் ரதம் ஓட்ட செல்பவர்கள்  தேரையும் சல்லியர்களையம் சிறிது இரவல் வாங்கி செல்பவர்கள்  குளிரூட்டப்பட்ட பெரிய வண்டியில்  வெண்குடை சாமரங்களுடன் பலர்  கையில் தட்டுத் தாம்பாளங்கள் மங்கலங்கள்  வேதகோசமும் சாமகீதமும் விடாமல் ஒலிக்க  தேர் யானை குதிரை காலாட்படைகள்  எல்லாமும் விக்கித்து நிற்கின்றன  ஒரே ஒரு அடி நகர்வும்  எழுப்பும் ஒலியால் அடுத்தவர் உரைத்...

ஒரு இடமாற்றம்

ஒரு இடமாற்றம்  நாங்கள் பெங்களூர் வந்து சிலமுறையே  வீடு மாறியிருக்கிறோம். ஆனால் தற்போது பழைய இடமாகியிருக்கும் அந்த  இடத்தில் ஏறக்குறைய பதினைந்து வருட வாசம். அந்த இடத்திற்கு முதலில் குடி பெயர்ந்த போது , உள்புற சுற்றுச் சாலை மற்றுமே இருந்தது. வெளிப்புற சுற்றுச் சாலை போட்டிருக்கவில்லை.இன்று ரிங் ரோடில் இருக்கும் பெரும்பான்மையான கம்பெனிகள், மேம்பாலங்கள் எதுவும் இருக்கவில்லை. அப்பொழுது மால்கள் புது போக்காக இருந்தன. அங்கிருந்த டோடல் மால் பிரபலம். ஒரு முறை சென்றிருந்தது நினைவு. மற்றபடி அப்பகுதி என் நினைவில் இல்லாத பகுதி. அப்போது அதை ஊருக்கு வெளியே என்று சொல்வார்கள். ஓசூர் சாலையையும் , திருப்பதி/வேலூர் சாலையையும் , ஹைதராபாத் , மற்றும் இதர கர்நாடகப் பகுதிகளையும் இணைக்கும் சாலை. அன்று சொன்னால் யாரும் ஒப்ப மாட்டார்கள். அன்று என்றால் என்றோ இல்லை, பதினைந்து வருடம் முன்னால் அவ்வளவே.  இன்று அந்த வழி எல்லாம் கம்பெனிகள் கோலோச்சுகின்றன. ஹெப்பால் மேம்பாலம் தாண்டியும் நெருக்கடி.இந்தப் பக்கம் சில்க் போர்டு என்ற அடையாளம் எங்கு இருக்கிறது என்று தெரியாமல் அடுக்கு மேம்பாலங்கள், ரயில் பாதைகள் ...

ஒரு வாசிக்கப்படாத ராமாயணம்

ஒரு வாசிக்கப்படாத ராமாயணம் நான் அன்று வீட்டின் உள்ளே நுழையும் போதே தொப்பலாக நனைந்திருந்தேன். கால் சட்டை வழியே நீர் ஊறி கால்கள் வழியே கீழே ஒழுகிக் கொண்டிருந்தது. நனைந்த பையை ஒரு கையில் பிடித்திருந்தேன். இன்னொரு கையில் இன்னொரு பலகாரப் பை இருந்தது. நேராக பாத்ரூம் சென்று உடையைக் கழற்றலாம் என்று , வரவேற்பறையைக் கடக்கும் பொழுது முதலில் ஒரு கால் வழுக்கியது. சமாளிக்க கைகள் இல்லை. பின்னர் இரண்டாவதும் வழுக்கியது. மல்லாந்து விழுந்த சத்தம் கேட்டு எல்லோரும் வந்து பார்த்தார்கள்.  அது ஆடி மாதம் ஆரம்பம் . தென் மேற்குப் பருவமழை, சரமாய் மலர் தொடுத்தாற்போல் பெய்து கொண்டிருந்தது. மேலிருந்து கீழ் வரும் அமைதியான வற்றாத நதி போல. இந்த மழை எளிதில் நிற்காது. மழையென்றும் பாராமல் அதனாலேயே கிளம்பியிருந்தேன்.  சரியாக அப்போது போன் அடித்தது. பெரியம்மாவிடம் இருந்து போன் அடித்தது. ஆபிசில் இருக்கும் போதே இரண்டு முறை போன் செய்திருந்தார்.வேலையில் இருந்ததால் எடுக்கத் தோதில்லை. பெரியம்மா அந்தக் காலத்து மனுஷி. ஒரு ஐந்தாறு முறையாவது முயற்சி செய்துதான் போனை நிறுத்துவார். 'முத்தையா , ஏன்டா போனே எடுக்கல ..' 'வேலையா இ...