Skip to main content

Posts

Showing posts from July, 2025

சைக்கிள் பதிவுகள் 15- ஏகாந்தம் , ஒரு காற்புள்ளி

சைக்கிள் பதிவுகள் 15- ஏகாந்தம் , ஒரு அரைப்புள்ளி இன்று திரும்பிப் பார்க்கும்போது இரண்டு வருடங்களுக்கு மேலாக சைக்கிள் குறிப்புகள் எழுதி வந்திருக்கிறேன். என்னுடைய எழுதும் பழக்கத்தை துவக்கி வைத்தது இந்த மிதிவண்டி.  இந்த வார இறுதியில் வீடு மாற வேண்டியிருக்கிறது. அலுவலகம் இன்னும் தூரம் ஆகிறது, ஒரு பக்கம் 30 கிலோமீட்டர். ஆகவே சைக்கிளை நிறுத்த வேண்டியிருக்கிறது, வேறு வழி கண்டுபிடிக்கும் சில நாட்களுக்காகவாது.  மிதிவண்டிக்கும் ஆறு வருடம் ஆகிவிட்டது. ஓய்வு கேட்கிறது என்று நினைக்கிறேன், சர்வீஸ் முடிந்து சில நாட்களில் பால்ரஸ் குண்டுகள் ஓடும் சத்தம் வர ஆரம்பிக்கிறது. வீடு மாறுவதில் எனக்குத் தோன்றும் இழப்பாகத் தெரிவது இந்த சைக்கிள் பயணமே. நம் வழியில் நாமாக சலனப் படாமல் போக முடிந்தது. பெரிய போட்டி ஒன்றும் இல்லை.நேரம் ஒரு ஐந்தோ பத்தோ நிமிடங்கள் அதிகம் ஆகலாம் , அவ்வளவே. பாடல்கள் கேட்கலாம், பதிகங்கள் கேட்கலாம், பேச்சுக்கள் கேட்கலாம். வேடிக்கை பார்க்கலாம். எல்லாமும் மேலே எதவாது உடற்பயிற்சி உடம்பை ஆட்டும் முயற்சி. என் பார்வையில் இது பெரிதல்ல. இது உடற்பயிற்சி என்பது சில நாட்கள் விட்டுச் செய்யும்பொ...

நெய் தவழ் வயிரப் பாறை - ஒரு ரயில் பயணம்

நெய் தவழ் வயிரப் பாறை  எப்பொழுதும் தனியாய்ச் செல்லும்பொழுது பேருந்தில் செல்வதே என் வழக்கம். நான் செல்லவேண்டியது ஈரோடு அந்தியூர் பக்கம். சென்றமுறை மேட்டூர் வழியாக , முந்தய நாள் இரவும் அல்லாத பகலும் அல்லாத அந்தியில் வேலை முடித்து ஆரம்பித்து , சரியாய் நள்ளிரவின் பின் சென்று சேர்ந்தேன்.  சென்று சேர்ந்தது மேட்டூர், செல்ல நினைத்திருந்ததோ அந்தியூர். இந்த ஊர்களெல்லாம் நள்ளிரவில் எப்படி இருக்கும் என்ற நல்ல அனுபவம் கிடைத்தது. இருட்டில் மூத்திரம் பெய்பவர்கள், மப்ளர் அணிந்து வான் வெளியில் நிற்பவர்கள், உட்கார இடமில்லாமல் குத்த வைத்திருப்பவர்கள், வரும் ஒரே வண்டிக்காக காத்திருக்கும் எல்லோரும் போல் அந்த வண்டிக்காக அவர்களில் ஒருவராய் நானும் நின்றேன். கடைசியில் இருட்டில் மூத்திரம் பெய்து முடித்த அந்த ஒரு பெரியவரிடம் 'அந்தியூர் அடுத்த வண்டி எப்ப  வரும்' என்றேன். 'இந்த இப்ப வந்துரும்' என்றார். 'எத்தனை மணிக்கு' என்றேன். 'அஞ்சரைக்கு' என்று என்றார். மணி இரவு பன்னிரெண்டே முக்கால். பின்னர் ஒரு விடுதியில் தங்கி காலையில் வயலில் வேலைக்குப் போகும் பெண்களுடன் மீண்டும் பயணம் ஆரம்பித்த...

பழைய பெட்டி

நேற்று இருபத்தைந்து வருடத்திற்கு முந்தைய பழைய பெட்டியை எடுத்துப் பார்க்க வேண்டும் போல் தோன்றியது. காரணம் கால்ச்சட்டை கிழிந்தது, எதாவது அதில் இருக்குமா என்று நீலா கேட்டதன் விளைவு. பழைய சட்டைகள் அடுக்கியிருந்தது. வாழ்நாளில் மேல்ச்சட்டைப் பிரச்னை வராது என்றே நினைக்கிறேன். பாண்ட் கிடைக்கவில்லை. சொல்ல வந்த விஷயம் வேறு.  இந்தப் பெட்டி முதலில் படிப்புக்காக வெளியூர் புறப்பட்டபோது வாங்கியது.அக்காலங்களில் பெரியமனிதரின் அடையாளம் சூட்கேஸ் என்று சொல்வார்கள். கூரை, ஓலைக்குடிசை இன்னும் இருந்த கால கட்டத்தில் ஒரு குட்டி கான்க்ரீட் கட்டிடம் போல் கையில் தூக்கிக் கொண்டு , சூட் போட்ட மனிதர்கள் தூக்கிக் கொண்டு வருவதால் அப்பெயரோ என்னவோ?.  அப்பா வீட்டின் நடுவில் இருந்த ஒரு இரும்புப் பெட்டியின் மேல் ஒரு சூட்கேஸ் வைத்திருந்தார். இரும்புப் பெட்டி இன்னும் புதிரானது. அந்தக் கால MGR , சிவாஜி படங்களில் வரும் வில்லன் யாருக்கும் தெரியாமல் உடைத்துக் கொள்ளையடிக்க முயற்சிக்கும் அதே மாடல். அதுவே அதன் கவர்ச்சிக்கும் காரணம். அப்போது வாடகையில் இருந்த போது வீட்டுக்காரர் விட்டுச் சென்றது. ஏன் விட்டுச் சென்றத...

சொல்லில் அடங்காத வலி

சொல்லில் அடங்காத வலி கடந்த சில தினங்களில் மீண்டும் தேவாரப் பாடல்கள் ஒன்றிரண்டு காணொளி பார்த்து கற்றுக் கொண்டேன்.  நாவுக்கரசரின் வீரட்டானதுறைப் பதிகம். குறிப்பாக கீழே உள்ள மூன்று.  'கூற்றாயினவாறு விலக்ககலீர் கொடுமை பல செய்தன  நானறியேன்  ஏற்றாய் அடிக்கே இரவும் பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும்  தோற்றதென் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி  முடக்கியிட  ஆற்றேன் அடியேன் அதிகை கெடில வீரட்டானத்துறை அம்மானே ' 'சலம்பூவொடு தூபம் மறந்தறியேன் தமிழோடுயிசை பாடல் மறந்தறியேன்  நலம்தீங்கிலும் உன்னை மறந்தறியேன் என்நாவில் உன்நாமம் மறந்தறியேன்  உலந்தார்தலை யில்பலி கொண்டுழல்வாய் உடலுள்ளுறு சூலை தவிர்த்தருள்வாய்  அலந்தேன் அடியேன் அதிகைக் கடில வீரட்டானத்துறை அம்மானே ' 'போர்த்தாயங்கோ ரானையின் ஈருரிதோல் புறங்காடரங் காநட மாடவல்லாய் ஆர்த்தான்அரக் கன்றனை மால்வரைக்கீழ் அடர்த்திட் டருள்செய்த அதுகருதாய் வேர்த்தும்புரண் டும்விழுந் தும் எழுந்தால் என்வேதனை யான விலக்கியிடாய் ஆர்த்தார்புனல் சூழ்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே." திருவதிகை கடலூர் பண்ருட்டி வழ...