Skip to main content

Posts

Showing posts from March, 2025

Can we manage our brain? - மொழிபெயர்ப்பு

சென்ற வாரம் சனிக்கிழமை காலை , இந்தக் கட்டுரை படித்தவுடன் , மொழிபெயர்க்க வேண்டும் (ஹர்ஷிதாவுக்கு) என்று தோன்றியது. முதல் மொழிபெயர்ப்பு ... மனதை வழிக்குக் கொண்டுவரும் பிடி வெளி உலகத்திலேயே இருக்கிறது என்பது ஒரு பெரிய திறப்பு என்று தோன்றியது. வெளியை ஒழுங்கு செய்வதே , உள்ளத்தை சரி செய்ய ஒரே வழி.   மொழிபெயர்ப்பு:   https://www.jeyamohan.in/213969/  மூலம் இங்கே : https://www.jeyamohan.in/213214/

அசோகமித்திரனின் சைக்கிள்

அசோகமித்திரனின் சைக்கிள் இந்த மாத விஷ்ணுபுரம் சொல்லாழி  கூடுகைக்கு முன் 18வது அட்சக்கோடு வாசித்தேன். அசோகமித்திரன் சைக்கிளில் போகும் பிம்பம் ஏனோ என் மனதில் வந்துகொண்டே இருந்தது. அசோகமித்திரன் பிற கதைகளில் வரும் சைக்கிள்களை தேடிப் பார்த்துக்கொண்டிருந்தேன். இது ஏனென்றால் நானும் ஒரு ஏழு வருடங்களாக, இங்கிருக்கும் போக்குவரத்து நெரிசலை நினைத்து தினமும்  போவதும் வருவதும் பதட்டமாகி உள்ளே பொறுமுவதை விட, சைக்கிளில் சென்று பார்க்கலாம் என்று ஒரு நாள் தோன்றியது. அலுவலகத்திற்கு சைக்கிள் மிதிக்க ஆரம்பித்தேன். ஒரு பக்கம் 15 கிமீ.  முதலில் மணி நேர உடற்பயிற்சி என்று நினைத்தேன். பின்னர் சில வாரங்களில் மனம் போட்டியில்லாததால் அமைதியடைய ஆரம்பித்தது என நினைத்தேன். பின்னர் அதில் ஏறினால் சிந்தனை ஒன்று படுவது போல் தோன்றியது. பின்னர் தெருவில் வேடிக்கை பார்த்து ஒரு சிறு விளையாட்டும் ஆனது. பின்னர் இந்த சைக்கிள் அனுபவங்களை எழுதிப் பார்த்திருக்கிறேன் சாம்பிள்கள் சில ).   கடந்த ஞாயிறு கூடுகைக்குப் பின், நேற்று அசோகமித்திரனை மீண்டும் தேடிப் படித்தேன். சாகித்திய அகாடெமி காணொளியில் லான்சர் பார்க்...

இன்னொரு மெஷின் யுகம்

அடிக்கடி காய்கறிக் கடைகளுக்குப் போகும்போது பில் போட கடைக்குப் புதிதாக வேலைக்கு வந்துள்ள மாணவிகளிடம் மாட்டிக் கொள்ள நேரிடுகிறது. இன்று அப்படி ஆனது. நம்மைப் போல் ஒருவனை கடவுள் கண்டுபிடித்துக் கருணையுடன் அவர்கள் வழி அனுப்புகிறான் என்று எடுத்துக் கொள்கிறேன். ஒரு வெள்ளைக் கோட்டை மாட்டியிருந்தார். மொத்தம் நாலு பேர் உள்ள பில் கவுண்டர். எல்லாம் இளம்பெண்கள் , இவர் மூணாவது மெஷினை ஓட்டிக் கொண்டிருக்கிறார். மற்ற மூவரும் பில்லை அடித்துத் தள்ளினார்கள். . நான் இந்த இடம் தேடி இப்போதெல்லாம் வருவதன் காரணம் நாளிதழில் வந்துகொண்டே இருக்கும் முழுப்பக்க விளம்பரம். இதைப் போலிருக்கும் வேறு கடைகளில் தனியாய் ஒருவர் நிறுப்பதற்கென்றே போட்டிருப்பார்கள். அவர் அதில் நிபுணர். காய்கறிகளை அதில் ஒவ்வொன்றாய் வைத்து , அதற்குள்ள எண்ணை நினைவில் கொண்டு வந்து , அதை அழுத்த வேண்டும். மெஷினுக்கு அந்தக் காய் என்பது அந்த நம்பர் தான் . ஒரு இடத்தில் நிறுத்து நிறுத்து அவர் கைகளே எண்ணை வரவழைக்கும். சில சமயம் வீட்டிலிருக்கும் அவரை போன் போட்டு முதலாளி நம்பர் கேட்பார். எனக்கு ஒரு நொடியில் இவர் தோதுப் பட மாட்டார் என்று தோன்றியது. என்ன...

பின் பார்த்த கண்ணாடி

பின் பார்த்த கண்ணாடி மது இவனிடம் இதை இப்போது மூன்று தினங்களாய் செய்யச்சொல்லி கேட்டுக்கொண்டிருக்கிறாள். இவன் ஏனோ அதைச் செய்யாமல் ஒத்திப்போட்டுக்கொண்டிருந்தான். மதுவின் பின்னால் இருந்து அவளுடைய ஒன்றுவிட்ட அக்காவுடைய துரத்தல் அவளுக்கு. காலையும் மாலையும் தொலைபேசியில் அழைத்து என்ன ஆயிற்று என்று கேட்கிறாள். அக்கணத்தில் அவளுக்கு அழைப்பு மீண்டும் வந்திருந்தது.   இவனுக்கிருந்த தயக்கம் பாலாஜியிடம் பேசியே பல வருடங்கள் ஆகியிருந்தன. இவனும் அவனும் பன்னிரண்டாவது வகுப்பில் சேர்ந்து  படித்தவர்கள். ஒரே தெருவில் வீடு. இவனது கிழக்கிலிருந்து மூன்றாவது, அவனது வீடு மேற்கிலிருந்து முதலாவது. நினைவில் இருப்பதெல்லாம் அவனுடைய பதின் பருவத்து முகம் மட்டுமே. இப்போது அவன் முகம் எப்படி இருக்கும் என்று இவனுக்கு கற்பனை செய்ய முடியவில்லை. அப்போதே பாலாஜி சற்றுக் கூனியே நடப்பான். ஒரு கித்தான் பையில் புத்தகங்கள், மஞ்சப்பையில் இரண்டடுக்கு டிப்பன் கேரியர். இரண்டடுக்கு கேரியர் திறந்து நடுவில் கிடையாய் கிடக்கும் கரண்டி பூட்டைக் கழற்றி சாப்பிடுவான். இவனைப் போலன்றி தினமும் இரண்டு வகை உண்வு, இரண்டுக்கும் மேல் தனித் த...

ஒரு baptism

ஒரு வேலை நடக்க வேண்டுமானால் பொறுமை அவசியம். உள்நோக்கி ஊழ்கத்தில் அமர்ந்த பின் சடை விழுந்து, உடல் சுற்றி புற்றுகள் எழ , பாம்புகள் பூச்சிகள் ஊற ஐந்து எழுத்தோ, ஏழு எழுத்தோ சொல்லிச் செய்யும் தவம் ஒரு வகை. இதற்கு இறைவனும் இறங்கி வந்திருக்கிறார்.  இன்றைய உலகியலில் இதற்க்கு பெயர் விடா முயற்சி. இசையமைப்பாளர் ஸ்ரீதர் ஜோஷ்வா(காதல்/கல்லூரி புகழ் )  வாழ்வில் தான் இசையமைக்கவே விரும்பியதாகவும், தினமும் இளையராஜா வீட்டின் முன் சென்று காலை முதல் மாலை வரை பல நாள்கள் நின்றிருப்பதாகவும், இறுதியில் ஒருநாள் கார்த்திக் ராஜா இறங்கி வந்ததாகச் சொல்லியிருக்கிறார்.  வெளி உலகில் இவ்வளவு தூக்கலாக இருக்கும் இதை வீட்டினுள் நன்றாகச் செய்பவர் என் பையன். இவருக்கு ஒரு தனி உத்தி இருக்கிறது. படிப்படியாக பொறுமையாக இழைப்பது. ஆசாரிகள் இதை இழைத்தல் , ராவுதல், கடைதல் என்பார்கள். ஒரு முழு நீள நிலப்படியே என்றாலும், ஆசாரி, சிறு பிள்ளைகள் கார் ஓட்டுவது போல் , சிலமுறை ராவினால், சுருள் சுருளாய் தோல் வெளியே வந்து கட்டை இளைக்கும், இல்லையா?.       என்றோ குற்றவுணர்ச்சியில் நான் வாங்கி வைத்திருக்கும் 2x6 கிலோ ...