Skip to main content

Posts

Showing posts from 2025

மனிதன் நடக்க வேண்டியது அவசியமா ?

மனிதன் நடக்க வேண்டியது அவசியமா ? நம் எல்லோருக்கும் இருக்கும் ஒரு கேள்வி. காலால் நடந்து என்ன ஆகி விடப் போகிறது? தினமும் பத்தாயிரம் அடிகள் நடக்க வேண்டும் என்கிறார்கள். சிலர் ஏழாயிரம் என்கிறார்கள். இது அவசியமா? எதாவது உடல் வேலை செய்வது முக்கியமா? ஆரோக்கியத்திற்கும் , கையையும் காலையையும் அசைப்பது சம்பந்தம் உண்டா ? அதிலும் தினமும் நடப்பது அவசியமா? அண்மையில் ஹுபெர்மன் வலையொலி மூலம் மனிதனின் நிணநீர் மண்டலம் குறித்து அறிய நேர்ந்தது. இது எனக்கு கண்திறப்பாய் அமைந்தது. எனவே அதைப்பற்றிய சிறு குறிப்பு.  நான் என்னுடைய பாட்டியின் ஊருக்கு முழுப்பரிட்சை விடுமுறையில் செல்லும் போது, காலை ஆறரை மணிக்கு வெளியே தெரு பார்த்து போடப் பட்டிருக்கும் திண்ணையில் முதுகு சாய்த்து உட்கார்ந்து பேப்பர் படித்தபடி , தெருவை வேடிக்கை பார்ப்பது எனக்குப் பிடித்த விஷயம். ஊர் கண் விழிக்கும் அந்த வேளையில், மணிகள் லேசாக குலுங்க, கன்றுகள் முன்னாலும் பின்னாலும் ஓட , அவ்வப்போது கம்பு மாட்டின் முதுகில் உறையும் ஓசையுடன் , எருமையும் , பசுவும், காளைகளும் தெருவில் சாணியும், மூத்திரமுமாய் ஒரு பக்கம் ஊரணி பார்த்துச்  செல்லும். மறு...

சில கவிதைகள்

சில கவிதைகள்  Potholes  ========= எங்கும் இல்லாத குண்டும் குழியுமான  நீளமான சாலையில்  பல கார்களைப் பின் தொடர்ந்து செல்கிறேன்  நேற்று நடை வந்த குழந்தையாய்  ஒரு கால் தரையிலும்  மறு கால் காற்றிலுமாய்  ஒரே சத்தமும் கும்மாளமுமாய்  எதிரும் புதிருமாய்  தத்தித் தாவி  வீதியில் அசைந்தாடிச்  செல்கின்றன    ஒரு ரவுடிக் குழந்தையாய்  டேங்கர் லாரி  எல்லோரையும் முந்தியவாறே  'க்ளக் க்ளக்' என  வழியெல்லாம்  நீரை எல்லோர் மேலேயும்   பீச்சியடித்துக் கடந்து  செல்கிறது  உள்ளே இருக்கும் டிரைவர்கள்  பெற்றவர்களாய்   பல் கடித்துப் பார்க்கிறார்கள் ஒற்றைத்  தாமரை  ============== இந்தப் புதுக் குடியிருப்பில்  தனித் தாமரையாய் அவள்  தனிமை என்கிறாள்  ஏகாந்தம் என்று சொல்லி  தப்பித்துப்  போகிறேன் தணலும் நீரும்  ========== ஓரிரு நாளாய்  உள்ளே தணலும்  வெளியே குளிருமாய் இவ்வுடல்  வழியெங்கும் கனலாய் எரியும்  தாமிர இலைகள்  அதன் மடியைப் பற்றி விழா...

சில கவிதைகள்

சில கவிதைகள்  ஒரு மறுசுழற்சி  ============ வெள்ளை வெய்யில் அடிக்க ஆரம்பிக்கும்  இந்தக் காலையில் அந்த மாபெரும் குப்பைத் தொட்டியை  ஒருவர் கிளறிக் கொண்டிருக்கிறார்  நான்கைந்து பாட்டில்களை குப்பைத் தொட்டியின்  சுவரில் தலைகீழாய் வடிய வைத்து  சுத்தப் படுத்திக் கொண்டிருக்கிறார்  இன்னும் ஆழமாய் கிளறி பாட்டில்களை மட்டும்  தோளில் தொங்கும் கோணிப்பையில்  ஒவ்வொன்றாய் சேர்க்கிறார் அன்றைக்கு தேவைப்படும் அளவு சேர்ந்தபின்  எடை மதித்து குப்பையை  வாங்கும் கடையில்  அதை பணமாய் மாற்றுகிறார்  அதே மாபெரும் குப்பைத் தொட்டிக்கு எதிர் கடையில்  வேறொரு பாட்டிலை கூண்டின் வழியே  வலது கைவிட்டு வாங்குகிறார்  தலை மேலே தட்டி  டம்ளர் நீர் சேர்த்து  ஒரு வாயில் உள்ளே ஊற்றுகிறார்  காலி பாட்டிலை  அந்த மாபெரும் குப்பைக் தொட்டியில்  வீசியபடி நிழலில் மறைகிறார் அந்த ஒரு முடிவின் மேல் உள்ள சுமை   ============================== இப்போது  இந்த நேரத்தின் பிற எல்லா முடிவுகளும்  அந்த ஒரே ஒரு முடிவின் மேல் ஏறி நிற்...

சில கவிதைகள்

பாட்டிலும் மூடியும்  -------------------- அவரவர் பாட்டில்கள்   அவரவர் மூடிகள்   அவருடைய ஒரு  பாட்டிலை  என் மூடியை  வைத்தும் மூடலாம்  என்கிறேன்  என்னுடைய ஒரு பாட்டிலை எப்போதும்  ஒருவர்  மூடியை மாற்று  என்கிறார்  எனவே என்  எல்லா பாட்டில்களும்  கசிந்து கழுத்து நடுங்கியபடியே   இருக்கின்றன  ஓர்  கணத்தில்  எல்லா மூடிகளையும்  கழற்றி  விண்  பார்க்க  பாட்டில்களை வைத்தேன்   கையில் இருந்தது பெரும்பாலும்  காலி பாட்டில்கள் என்றறிந்தேன்  மேலும் சிலவற்றை ஒளி வற்றியது  சிலவற்றை காற்று இல்லாமல் ஆக்கியது  கடைசியில்  ஒன்றை  நானே ஓர்  மிடறாய்   குடித்துக் கவிழ்த்தேன் பாடபேதம் ------------- தொலைபேசிக் கூடுகையில்  அந்தச் சீனாக்கார பெண்மணி  இன்னொருவரை  லகுவாய் மதம் மாற்றினார்  ரவி என்ற ஒரே சொல்லை  ரஃபி என்று மட்டும் மீண்டும் மீண்டும் சொல்லி எதிர்காலம் என்பது  --------------------- இளமையின்  எட்டுத் திசையும் அவரை  உள்ள...

இந்த நாள்

இந்த நாள் ... -------------- நவம்பர் 1 என் வாழ்வில் ஒரு முக்கியமான நாள். இன்றுடன் கல்யாணம் ஆகி பதினெட்டு வருடம் ஆகிறது. ஒரு வயதில் கல்யாண நாள் மறந்துவிடும் என்பார்கள். இப்போதெல்லாம் பெயர்கள் மறக்கின்றன. நேற்று ஒரு அம்மாள் போனில் நான் பையனை வகுப்பில் பேர் போட நினைவில் நிறுத்த வேண்டிய இரண்டு பெயர்கள். அப்புறம் அவர் பெயரை அவர்களிடம் சொல்ல வேண்டுமா என்று கேட்டேன். நல்ல வேலையாக அவர் பெயரை மீண்டும் சொன்னார். ஆக மூன்று பெயர்கள் அரைமணிக்கு நினைவில் நிற்க வேண்டும். மூன்று பெயர்கள் போக அந்தப் பள்ளியின் பெயர் மறந்து போனது, ஒரு மாதிரி பெயரில்லாமல் சமாளித்து முடித்தேன். இப்போது வருகிறது, ஆண்ட அம்மாள் பெயர் ஸ்நேகல். திருமண நாள் அன்று என்றைக்கும் பெங்களூரில் விடுமுறை. கர்நாடகா தனி மாநிலமாக மாறிய நாள். ஆக மறப்பது கடினம். அப்படி ஒரு தானாய் அமைந்த அமைப்பு. அப்படித்தான் வாழ்க்கை சுவரில் கிழித்த இந்த 18வது மணக் கோடும் ஆரம்பித்தது.  காலை காபிக்கு பால் சுட வைக்கும் வேலை முதலில், ஏனோ பித்தா பிறை சூடி என்று வாயில் வந்தது. பின்னர் தெரிந்த இன்னும் சில தேவாரப் பதிகங்கள் காபியுடன் கரடு முரடாய்ச் சொன்னேன். 'அர...

ஒரு செடியின் கல்லறை

ஒரு செடியின் கல்லறை  -------------------------- நான் வேலைக்குச் செல்லும் போது தினமும் பார்க்கும் காட்சி , அடுத்த வீட்டு ஓனரின் அப்பா ஒரு ஹோஸ் பைப்பை கையில் வைத்து தெருவெல்லாம் தண்ணீர் ஒட வைப்பார். அது போல் எல்லா வீடுகளிலும் ஏதோ ஒரு அம்மாவோ, பாட்டியோ செடிக்குத் தண்ணீர் விட்டுக் கொண்டிருப்பார் . இங்கு எல்லார் வீட்டு வாசலிலும் பூச்செடிகள் இருக்கின்றன. விரித்த பசும்புல் பாயில் இடையில் செடிகள் அமர்ந்திருக்கும். சில நின்றபடி இருக்கும். சில செடிகள் தவழ்ந்தபடி இருக்கும்  . சில நீராய் வழி தேடி தரையில் ஓடியபடி இருக்கும். சில கொடியாய் , மேகமாய் , பறவையாய் வானில் வழி கேட்டு நிற்கும். இதற்கெல்லாம் இடையில் சிலையாய் ஒரு மரம். ஆனால் எல்லாவற்றிலும் தலையில் பூக்கள். ரோஜாவும், கேந்தியும் , செம்பருத்தியும், குல்மோகர், குறிப்பாய் ஆப்ரிக்கன் துலிப். இந்த ஊரின் செங்காந்தள். மரமே கனன்று எரிவது போல் இருக்கும். அப்புறம் அந்த யானைக் காதுகள் போல் இலைகளை மெலிதாய் ஆட்டியபடி இருக்கும் அந்தச் செடி. கட்டிப் போட்ட நாயாய் , கைப்பிள்ளையாய்  சிறிய, பெரிய தொட்டிகளில் வளரும் செடிகள். தலையிலும் இடுப்பிலும் ஏறி ...

கவிதை - ஒரு சுய புரிதல்

கவிதை ஒரு சுய புரிதல்  மரபு இலக்கியம் வாசிக்கும்போது நம்மாலும் இப்படி எழுத முடியுமா என்று ஆசை எழுகிறது. மனுஷ்ய புத்திரன் , விக்ரமாதித்யன் , கல்யாணி, கலாப்ரியா போன்றவர்களின் கவிதைகளை விரும்பிப் படிப்பேன். முன்னெல்லாம் தேவ தேவன் பிடிபடக் கடினமாக இருந்தன. இப்போதெல்லாம் பரவாயில்லை. ஆனால் அவர் சொல்லும் வால்ட் விட்மன் போன்ற ஆங்கிலக் கவிஞர்கள் படித்ததில்லை. இப்போது ஒரு ஆர்வம் வருகிறது, இதற்கெல்லாம் காரணம் கம்ப ராமாயணம் படிக்க ஆரம்பித்ததே என நினைக்கிறேன்.கம்பன் என்றால் கற்பனை, காட்சிப் படுத்துதல், மொழி அழகு, நாடகத் தருணங்கள், நாலு வரிக்குள்ளும் இருக்கும் மிக நுண்ணிய விவரணைகள் என்று சொல்வேன். இதை ஏன் (இன்னும் முதல் புத்தகம் மட்டுமே ) எனக்குப் படிக்கத் தோன்றுகிறது என்றால் 'செஞ்சொற் கவி இன்பம்' என்பதே. படித்ததும் ஒரு உவகை ஏற்படுகிறது. இதையே தேவதேவன் தன்னுடைய கவிதை பற்றி என்ற நூலில் கவி அனுபவம் என்கிறார். ஏனோ சில நாட்களாக இதிலேயே மனம் செல்கிறது. இப்போதெல்லாம் வண்டியில் செல்லும் போதும் வரும் போதும் பெரும்பாலும் கிண்டிலில் கவிதையே படிக்கிறேன். கவிதை படித்துப் பின் வருவதை இது ஒரு போதை போல என்...

கலங்கும் பொழுது தெளியுஞ்சொல் - கலைவாணி

கலங்கும் பொழுது தெளியுஞ்சொல் -  கலைவாணி சரஸ்வதி அந்தாதி  அந்தாதி என்றால் ஆதி + அந்தம் , முதலும் , முடிவும் இரண்டுமானது என்று பொருள். சரஸ்வதி அந்தாதி என்றால் , முதலும் முடிவுமான சரஸ்வதி என்று பொருள்.  சிறுவயதில் பாட்டி  அபிராமி அந்தாதி சாத்திரத்திற்கு ரெண்டு மூன்று பாட்டு  சொல்லிக் கொடுக்கும்போது அந்தாதி என்றால் முடிந்த எழுத்தில் அடுத்த பாடல் ஆரம்பிக்கும் என்று சொல்லிக் கொடுத்தார். நூறு செய்யுளும் மாலை கோர்த்தது போல் நினைத்துக் கொள்ள வேண்டும். ஆரம்பித்த சொல்லில் திரும்ப முடியும். ஆனால் இதன் குறியீட்டுப் பொருள் முதலும் முடிவுமான கடவுளை மனதில் வைத்துப் பாடுவது. கம்பர் ராமாயணம் போக இயற்றிய நூல்களுள் ஒன்று சரஸ்வதி அந்தாதி. டூயட் படத்தில் மெட்டுப்போடு பாட்டுக்கு முன் ஒலிக்கும் , அவரது அம்மா மணி அடித்து ஆரத்தி காட்டிப் பாடும் துதிப் பாடல் கம்பர் அந்தாதியின் இரண்டு காப்புப் பாடலின் முதலாவது.  'ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்   ஏய உணர்விக்கும் என் அம்மை - தூய   உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தின் உள்ளே   இருப்பள் இங்கு வாராது இடர்'...

நெடுநாள் நட்பும், ஒரு அழகிய கடற்கரையும் , முழுநிலவும் , எழு கதிரும்

நெடுநாள் நட்பும், ஒரு அழகிய கடற்கரையும் , முழுநிலவும் , எழு கதிரும் 'செயற்கரிய யாவுள நட்பின்' என்று வள்ளுவர் சொல்லியிருக்கிறார். அதாவது நட்பிற்கு மேல் செய்வதற்கு என்ன இருக்கிறது. எதுவுமில்லை. மேலே அடுத்த வரி அதைப் போல் செயல் காப்பது எதுவும் இல்லை என்பது. ஆனால் நடப்பில் அப்படி இல்லை. நட்புக்கு ஒரு பயணம் என்றால் பேச்சு அறுபட்டு டம்ளர் சொம்பு ஓசைகள் அதிகமாகும். இன்னும் நெடுநாள் நட்பு என்றால் செய்ய வேண்டிய வேலைகள் நினைவூட்டப் படும். ஆனால் இதற்கெல்லாம் வெளியே வர டெக்கினிக்குகள் இருக்கின்றன.  இதை எழுதிக் குலைக்க முடியாது. வருடம் செல்லச் செல்ல தடை மீறிய பயணம் ஆகிறது.  இதைப் போல என்ன ஆனாலும் கூட்டம் கூட்டுவது என்று ஒரு சிலர் இருப்பதனால் தான் இப்படி நடைமுறைச் சிக்கல்களின் நடுவிலும் கூட்டங்கள் நடக்க முடியும். 144 போட்டால் ஐந்து பேர் மேல் கூடக்கூடாது என்று சட்டத்தில் இருக்கிறது. இந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் வீட்டுக்குள்ளேயே யாரும் பேச முடியாது. இன்று அபார்ட்மெண்ட்கள் பொதுவிடம் இல்லாமல் தனியிடத்தில் சேருமா.  ஆக என்ன ஆனாலும் சேர்ப்பதுவும், என்ன ஆனாலும் செல்வதுவும் சேர்ந...