Skip to main content

Posts

Showing posts from April, 2024

முதல் மழை

முதல் மழை எனக்கு எட்டு ஒன்பது வயது இருந்தபோது உள்ளூர் கிராம பஞ்சாயத்து பள்ளியில் இருந்து நிறுத்தி வெளியூர் பள்ளியில் சேர்த்தார்கள். இரண்டிலுருந்து மூன்றாவது வகுப்பு செல்ல வேண்டும். வீட்டில் எதிர்வீட்டில் 1 வது வகுப்பு டீச்சர் இருந்தார். ஒன்பது மணிக்கு வேலைக்குச் செல்லும் முன், கிழக்கே பார்த்து நடுத்த தெருவில் நின்று ராஜகோபாலப் பெருமாளை 'பெருமாளே ' என்று சிரம் உயர்த்திக் கும்பிட்டு, என்னையும் ஒரு குரல் கொடுத்து பள்ளிக்கு கூட்டிச் செல்வார். தினமும் கை பிடித்து கூட்டிச் செல்வார் என்று எழுதலாம், ஆனால் உண்மையில் மிக வேகமாய் நடப்பார் , ஓடித்தான் பின்னால் சென்றாக வேண்டும். மிக நீள ஜடை  , ஆனால் வெள்ளை. பிறந்த நாள் அன்று சென்று காலில் விழுந்து வணங்கினால் , ஒரு ஸ்பூன் சக்கரையும் , ஒரு ரூபாயும் கொடுப்பார் . நிற்க, முழுத் தெருவையும் கடந்து , அதாவது, மொத்த வீடுகள் 66, எங்கள் வீட்டின் எண்  2/63, பின்னோக்கி எதிர் எதிராய் 60 வது வீடுகள் , உள்ளே வெளியே பார்த்தபடி நடந்தால் , நூலகம் தாண்டி , ரோட்டின் மேலேறினால் பள்ளிக்கூடம் வரும். ஒரே சத்தம் தான் நினைவில் இருக்கிறது. ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை,...

உயர்ந்தோர் மாட்டே உலகம் -2

உயர்ந்தோர் மாட்டே உலகம் -1 சனிக்கிழமையன்று இப்போதெல்லாம் போக்குவரத்து நெரிசல் வாரநாட்களை விட அதிகமாய் இருக்கிறது. ஒட்டுமொத்த அவுட்டர் ரிங் ரோடும் , ஸ்டெண்டுகளால் தூக்கி நிமிர்த்தப்பட்ட ஒரு ரத்தக்குழாய் போல் காட்சி தருகிறது. மேலே மெட்ரோ எனும் இதய சிகிச்சை  நடந்து கொண்டிருக்கிறது. கீழே நகரம் ஒரு மாதிரி வளைந்து கசிந்து ஓடிக்கொண்டிருக்கிறது. நானும் ,இரண்டு நண்பர்களும் இணைந்து செல்வதாகத் திட்டம்.  ஒரு வழியாக பத்துநிமிட முன்னதாக சென்று சேர்ந்தோம். வெளியே புத்தகக் கடை வைக்கப்பட்டிருந்ததது. புத்தகம் விற்கும் பெண்மணி , 'எல்லாம் வாங்குற புத்தகத்தையே திரும்பி வாங்குறாங்களா?' என்றார். ஒரு கணம் முன் நம்மிடம் எந்த புத்தகம் இருக்கிறது இல்லை என்று தடுமாறிக் கொண்டிருந்தேன். உள்ளே சென்று ஒரு தேநீர் குடித்து அமர்ந்ததும் ஜெயமோகன் உள்ளே நுழைந்தார். மிக மெல்லிய சலசலப்பு, பலர்  நாற்காலியில் இருந்து எழுந்து, அவரைப் பார்த்து அமர்ந்தனர். சளைக்காமல் கையெழுத்துப் போட்டபடியே  இருந்தார்.  சரியாக ஆறு மணிக்கு உரை தொடங்கியது.  வாழ்நாள் முழுதும் தொடர்ச்சியாய் இடைவிடாமல் எழுதிக்கொண்டிருப்பதா...

உயர்ந்தோர் மாட்டே உலகம் -1

சென்ற சனியன்று ஒரு சிறு நேர மோதல். அன்று ஸ்ரீயின் பிறந்த நாள். அதே நாளில் ஜெயமோகன் பெங்களூர் கட்டண உரை. இருவரும் நடுவே  ஒரு சில வாரங்களாக  திட்டமிடல். ஒரு வழியாக நட்சத்திரம் காட்டி முந்தய நாள் கொண்டாட முடிவெடுத்தோம். கொண்டாடுவது என்றால், அவனுடைய நண்பர்கள் கூட்டமாய்ச்  சென்று கால்பந்து ஆடுவது, பின்னர் ஒரு சிறு ஸ்னாக்ஸ் பார்ட்டி என்று திட்டம். பாட்டி, தாத்தாக்கள் குடுத்த பணமெல்லாம் எடுத்து புழக்கத்தில் விடுவதாகவும், நடத்தித் தருமாறும் நாளும் வேண்டினார். வேறு வழியில்லை. அவர் காட்டிய மாற்று வழி இன்னும் கடினமானது. காகிதத்தில் பெயர்களை எழுதி , இரு அணிகளாக்கி என்னையும் ஒரு பக்கம்  கோல் கீப்பர் ஆக்கி , ஏழுக்கு நாலு என்று நம் பக்கம் சரியாக தோல்வியில் முடிந்தது. கோலை நான் விடுவதை அவர் அம்மா படம் எடுத்திருந்தார்கள். பந்தை தடுத்து எறியும் பொழுது, ஒரு நாலு பேர் ஓடி வந்து ' வாட் அங்கிள் , யூ ஷுட் நாட் த்ரோ நௌ..யூ ஷுட் புட் இட் டௌன் , கிக்'  ...என்றனர். கீழே வைத்து உதைக்கும் முன் , எறிய வேண்டும் என்றனர். சரியாய் எட்டு மணிக்கு ஆட்டம் முடிந்ததும், ஒரு அலுவலக அழைப்பு , காரில் போட...