Skip to main content

Posts

Showing posts from March, 2024

சைக்கிள் பதிவுகள் -8 - சருகின் எடை

சருகின் எடை  இப்போதெல்லாம் காலையில் எழுந்து கீழே கால் வைத்து, முதலடி தரையில் படும்போது ஒரு வெம்மை வர ஆரம்பித்திருக்கிறது. இரண்டொரு நிமிடங்களில் நெற்றியில் பூத்து விடுகிறது. கதவைத் திறந்து சிறு  உப்பரிகையில் நின்றால் இப்போதும் பிரிட்ஜை திறந்து நிற்பது போல், இனிய சொல் போல இன்னும் மிதமாய் குளிர். ‘அண்டம் முற்றும் திரிந்து அயர்ந்தாய், அமுது உண்டு போதி’ என்று வரும் கதிரவனை எதிர்பார்த்து காத்திருக்கும். இப்போதெல்லாம் அவர் சரியாய் வந்து விடுவார். மேகம் ஊர்ந்து, மேல் ஏறிச் செல்லும் விண்ணவன் இல்லை. தனியாய் வருகிறார். உலகைக் காக்க அவரன்றி யார் உளார்  ? இதைப் புரியவைக்க வேறு சரியான நேரம்தான் உண்டா ?   //  ‘வானே புக்கான் அரும் புதல்வன்’  மக்கள் அகன்றார்; வரும் அளவும் யானே காப்பென், இவ் உலகை’ தசரதன் இறந்துபட்டவுடன், சூரியன் வேறு எவர் வேண்டும், என்றும் நான் இருக்கிறேன் மக்களைக் காக்க, என்று தேரில் ஏறித்  தோன்றியதாக  கம்பர் எழுதுகிறார்.  மார்ச் மாத காலை பொழுது வேறு தான்.  நாய்கள் காலையிலே நிழல் தேடிக் கண்டு இன்னும் கொஞ்சம் உறங்குகின்றன. ஒரு இலையுமன்றி ...

கோடிக்கால் பூதம்

கோடிக்கால் பூதம்  சைக்கிள் மிதித்துச் செல்லும் போது காதில் எதாவது ஓடிக்கொண்டே இருந்தால் தூரம் தெரியாது. ஏதவாது போட்காஸ்ட் அல்லது பாடல்கள். ஒரு சில நாள்களில் வெறும் வேடிக்கை அல்லது அன்றைய யோசனை. பாடல் என்றால் ஒரு பன்னிரண்டு அல்லது பதிமூன்று பாடல்களுக்குள் இடம் வந்துவிடும். பொதுவாக ஒரு தேடல் போட்டு, வேறு யாரோ ஒருவர் பதிவிட்ட பிளே லிஸ்டை சீரற்ற வரிசையில் கேட்பது என் வழக்கம்கே. எதோ ஒரு பாடல் அல்லது ஒரு வரி நாளெல்லாம் மனதில் ஓடிக்கொண்டு இருக்கும்.   அன்று டி.எல். மகாராஜன் பாடிய காதல் யோகி யோகி என்ற பாடல் வந்தது ( https://www.youtube.com/watch?v=mwIS_fZ2mRc ). பரணில் ஏறி ஏதாவது எடுக்கும் போது , வேறு எதாவது தட்டுப்பட்டு நினைவுகளை இன்னும் பின் தள்ளுவது போல. தாளம் (taal ) 1999-ல் வெளிவந்தது. முதலில் ஹிந்தியில் , பின்னர் தமிழ் ஒலிச்சேர்க்கை செய்யப்பட்டு வெளி வந்தது. ரஹ்மானின் இசையில் பாடல்களுக்காவே பிரபலமானது. தமிழ் பாடல்களும் மிகப் பெரும் வரவேற்ப்பை பெற்றன. நான் கல்லூரி  படிக்கும் நேரத்தில் ஒன்று இதை விசிடி (திருட்டு) அல்லது ஊபர் கட்டிய ஒலிப்பெட்டிகளிலோ கூடிக் கேட்பார்கள். மேலும் ...

வீட்டிற்குள் ஒரு அழுத்தம்

வீட்டிற்குள் ஒரு அழுத்தம் ஒன்றைக் கேட்பது என்பதும் ஒரு கலை தான். கேட்பது என்பது எப்போதும் எனக்கு ஒரு சிக்கல். ஆனால் நமக்கில்லாததை ஒருவாறு கேட்க முடிகிறது. குழந்தைகளுக்கு இந்தத் தடை இருப்பதில்லை. குழந்தைகளில் கொஞ்சம் நாசுக்காக கேட்பது என்பதை பார்ப்பது அரிது. ஸ்ரீ இதை எல்லாம் தாண்டியிருக்கிறார் இப்போது. ஒரு ஆறு ஏழு வயது வரை எதுவுமே கேட்க மாட்டார். இவரது அக்காவை வைத்துப் பார்க்கும் போது , இது எங்கிருந்து வந்தது என்று தோன்றும். ஏதாவது புத்தர் , ரமணர்  தோன்றியிருக்கிறாரா என்று நினைத்ததுண்டு. இவருக்கு ரமணர் என்று ரெண்டாவது பெயர் (என்னால் ) போடப்பட்டுள்ளது என்னை மேலும் சிந்திக்க வைத்ததுண்டு. ஆசையெல்லாம் விட்டுவிட்டு பூமியில் இறங்கியிருக்கிறாரோ என்று தோன்றும். எவ்வளவு பெரிய கடைக்குள்  சென்றாலும், பொம்மைகள், கார்களின் நடுவே நின்று கொண்டு ' எனக்கு எதும் வேண்டாம்ப்பா ' என்று சொல்லிவிடுவார். ஓட்டலில் யார் என்ன சாப்பிட்டாலும் இவர் இரண்டு இட்டிலி மட்டும் உண்பார். அந்த இனிக்கும் சாம்பார்க்ககவே உண்பார். பூச்சிகள் நழுவி தேனில் விழுந்து இறப்பது போல் , இட்டிலியெல்லாம் சாம்பார் கிண்ணத்தில் மரணம் ...