Skip to main content

Posts

Showing posts from January, 2024

உடல் நலம் / மருத்துவம் - சில சார்வாக சிந்தனைகள் - 1

உடல் நலம் / மருத்துவம் - சில சார்வாக சிந்தனைகள் - 1 மாசனோபு புகோகா வேளாண்மையில் ஒரு சார்வாக சிந்தனையாளர். இவர் எழுதிய ஒற்றை வைக்கோல் புரட்சி என்பது மிக பிரபலமான புத்தகம். 1930 களில் தாவரவியல் நுண்ணுயிர் ஆராய்ச்சியாளராக (Microbiology ) வாழ்க்கையைத்  தொடங்கியவர்.  தாவரங்களில் தாக்கும் நோய்கள் பற்றி ஆராய்ச்சி செய்வது இவர் வேலை. நாள் முழுதும் ஒரு கண்ணால் மைக்ரோஸ்கோப் வழியே பார்த்துக்கொண்டே இருப்பது. நிமோனியா காய்ச்சல் வந்து மரண விளிம்பில் இருந்து மீள்கிறார். இந்நிகழ்வு  இவருக்கு மரணத்தின் முன் வாழ்க்கையின் மதிப்பெண்ண என்ற கேள்வியை எழுப்புகிறது. இடைவிடாது ஊர்களிலும் காடுகளிலும் சுற்றித் திரிந்த அந்த நாட்களில் , ஒரு இரவில் மலைச்சரிவில் மயங்கி விழுகிறார். இந்த இரவை தன் வாழ்வின் திருப்புமுனை என்று சொல்கிறார். கண் விழித்தபோது காலைக் கதிரவனின் பொன்னொளியில், வானில் ஒரு பறவை சிறகடித்து கடக்க, கீழே குப்பையில் ஒரு நெல் முளை விட்டிருப்பதைக் காண்கிறார். அவருக்கு இது ஒரு ஜென் தருணம், பெரிய திறப்பைத் தருகிறது . இயற்க்கைக்கு முன் மனிதன் ஒன்றும் செய்ய வேண்டியதில்லை. 'ஒன்றும் செய்யாத விவசாயம்...

பெங்களூர் - ஒரு வரலாற்று வரைபடம் - 2

  பெங்களூர் - ஒரு வரலாற்று வரைபடம் - 2 பெங்களூரில் நிறைய கேட்கநேரும் ஒரு பெயர் கெம்பே கவுடா என்பது. மைய பேருந்து நிலையத்தின் , விமான நிலையத்தின், ரயில் நிலையத்தின் பெயர் எல்லாமே ஒன்றே தான் . வீட்டை விட்டு வெளியேறி இவர் சிலையை பார்க்காமல் வீட்டிற்குள் உள்ளே வர முடியாது. சட்டசபையின் முன்னே வாள்பிடித்து , நடக்கும் குதிரையில் அவர் அமர்ந்து செல்லும் ஒரு வெண்கலச்சிலை இருக்கிறது. புரவி நிலம் பார்த்து வல முன்கால் ஊன்றி , பின்னங்கால் அழுத்தி உயர்ந்தும், இடமுன்கால் காற்றில் எழுந்து, இடப்புற பின் கால் நன்றாய் ஊன்றி , ஒரு அபாரமான ஸ்னாப் ஷாட், சிலையில் வடித்தது. அவர் முகமும் கண்களும் எங்கோ வெளியைப் பார்த்து இருக்கும். கையில் தாளப் பிடித்த வாள் . சாந்த மூர்த்தம் என்று தான் சொல்ல வேண்டும்.   பெங்களூருக்கு இரண்டு தலபுராணங்கள்.  ஹொய்சாள வம்சத்தை துவக்கிய வீரவல்லாளர் வேட்டையின் போது களைப்பாகி இன்றைய எலகங்கா வேளாண்மைக் கல்லூரி உள்ள இடத்தில் உணவு தேடி தனியாக ஒரு குடிசையில் நுழைந்தார். ஒரு வயதான பாட்டி வீட்டில் ஏதும் இல்லாமல் அவித்த வேர்க்கடலையை அரசனுக்கு அளித்தார். பசிக்  கொடுமையாக இருந...