Skip to main content

Posts

Showing posts from October, 2023

ஒரு தொழில்நுட்ப உரசல்

 ஒரு தொழில்நுட்ப உரசல் தொடுதிரை என்னும் கல்பற்றா நாராயணன் கவிதை. ஒரு அப்பா டச் ஸ்கிரீன் திரையில் தடுமாறுவதையும் , அவர் பையன் நீரில் நடக்கும் கிறிஸ்துவைப்போல் தொடக்கூட இல்லாமல் திரையில் கைகளால் நடந்து செல்கிறான். அழுந்தக் கால்பதித்தே நடந்து பழகிய அவர் வாழ்வு நம் கண்முன் வருகிறது. பலமே தேவையில்லாத ஒரு வாசலின் முன் தனியனாய் வந்து நின்று இருக்கிறார்.     "காய்த்துப்போன விரலிருந்தும் எத்தனை அழுத்தியபோதும் செயல்படவில்லை. இது தொடுதிரை அப்பா மெல்ல தொட்டாலே போதும் அழுத்தவே வேண்டியதில்லை சொல்லப்போனால் தொடக்கூடவேண்டியதில்லை இதோ இப்படி அவன் விரல் நீரின்மேல் ஏசு போல நடந்தது அவன் விரும்பியபடி செயல்பட்டன எல்லாம் உலகம் எனக்கு வசப்படாமலிருந்தது இதனால்தானா? நான் தேவைக்குமேல் அழுத்திவிட்டேனா? " ... மேல்தளத்தில் எடையில்லாமல் நகர என்னால் இயலவில்லை முதல் அடியிலேயே நான் மூழ்கினேன் பூ விரிவதை கண்டதில்லையா செடி அழுத்துகிறதா என்ன? ஆனால் நான் பழுதடைந்த மின்விசிறிபோல ஓசையிட்டபடி மலர்ந்தேன் நெற்றி வியர்வையை கொதிக்கவைத்து என் அப்பங்களை வேகவைத்தேன் அது ஐந்தாயிரம்பேருக்கல்ல ஐந்துபேருக்கே போதவில்லை. என் ...

மஹாலயம்

சில வருடங்களுக்கு முன் ஏனோ எங்காவது மஹாளயம் என்ற வார்த்தை கேட்டால்  , எனக்கு உடனே பிரளயம் என்ற சொல் மனதில் ஓடும். ஜெயகாந்தன் பிரளயம் என்று ஒரு கதை எழுதியிருக்கிறார். 'சென்னையில் ஒருமுறை வந்த வெள்ளத்தின் போது நிகழ்ந்த அலங்கோலங்களை, மனிதனின் சிறுமைகளை, 'கொடைவள்ளல்'களின் மான வெட்கமற்ற தற் பெருமைச் சவடால்தனங்களைக் கண்டபோது என் மனத்தில் ஏற்பட்ட கைப்பு உணர்ச்சியில் எழுந்தது' என்று அவரே சொல்கிறார். ஆரம்பமே அம்மாசிக் கிழவனுடைய வளர்ப்பு மகளுக்கு திருமணம் செய்து வைக்கும் முதலாளியின் பையன். மாப்பிள்ளை சின்னான் அவர் வீட்டில் பிரைவேட் ரிக்சா ஓட்டுபவன். 20 ரூபாய் பணம் , ரெண்டு நாள் லீவு , அடுத்த நாள் கல்யாணம். அம்மாசிக் கிழவன் இந்தச் சேரியில் விதி விலக்கு, மனிதர்களுடன் ஒட்டவில்லை. குழந்தைகளுடன் தான் அவனுக்கு மகிழ்ச்சி இருக்கிறது. ஆனாலும் அவன் செல்லும் வழியெல்லாம் மனிதர்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள். குழாயடியில் , பாயை விரித்து படுக்கும் இடத்தில் ,பாயை கையில் எடுத்து படுக்கப் போகும் வழியில் மனிதர்கள் முளைத்துக் கொண்டே இருக்கிறார்கள். எல்லோரிடமும் பெரியவர் பேசியபடியே செல்கிறார், கடைச...