Skip to main content

Posts

Showing posts from June, 2023

கம்பராமாயணம் - 3 - மாபெரும் கால்களின் கீழே

  டி.கே .சி எழுதிய கம்பர் தரும் ராமாயணம் மேல் நோக்கி கிளை விரித்து சென்ற வண்ணம் இருக்கிறது. கம்பராமாயணத்தில் வரும் பாடல்களை இடைச்செருகல் என்று பல பாடல்களை நிராகரிக்கிறார். இவர் மேலும் தொகுத்து எழுதியது இப்புத்தகம். எனவே சொல்ல வேண்டியதில்லை, பொறுக்கி எடுத்து இருக்கிறார் , நயம் சொல்லி விரித்து எழுதி இருக்கிறார்..  கம்ப நாடகமும், கம்ப சித்திரமுமே நம்மை உள்ளிழுத்துச் செல்கிறது என நினைக்கிறேன்( டி.கே .சி ). நாடகத்தை விட கம்பர் காட்டும் சித்திரமே எனக்கு உவப்பாய் இருக்கிறது.   சித்திர கூட படலத்தில் லட்சுமணன் காட்டில் குடிசை அமைக்கும் காட்சி வருகிறது. வளைவில்லாத, நேரான பக்கவாட்டு மூங்கில்களை நிறுத்தி, மேலாக குறுக்குக்கழிகளை தாளாமல் சேர்த்துக் கட்டி முடிந்தான். மேலே கூரையில் தேக்கின் இலைகளை பரப்பி, அதன் மேல் பூத்த நாணல் புற்களை வெய்து, கீழே நிறுத்திய கழிகளுக்கு இடையில் மண்ணை அடித்து , சுவர் எழுப்பி அதில் நீர் பூசி மெழுகினான்.     நெடுங் கழை குறுந்தறி     நிறுவி, மேல் நிரைத்து, ஒடுங்கல் இல் நெடுமுகடு     ஒழுக்கி, ஊழ் உற இடுங்கல் இல் கை விசித்து ...

கம்பராமாயணம் - 2 - புது வெள்ளம்

ஸ்ரீ குழந்தையாக, ஒரு இரண்டு மூன்று வயது இருக்கும் போது அவர் அழுவதைப் பார்ப்பது அவர் எனக்கு எப்போதுமே  அலுக்காது. வசதியாக உட்கார்ந்து கால்கள் இரண்டையும் அகட்டி வைத்து, கைகள் இரண்டையும் ஒன்றாக கோர்த்தபடி, கழுத்தை சிறிது வான் நோக்கி உயர்த்தி , உயர்ந்த ஒரு பிரார்த்தனை போல்  அழுவான். எதோ ஒரு நிமிடத்தில் முழு மூச்சை உள் வாங்கி, பலத்தையெல்லாம் திரட்டி, கைகளை அழுத்தி, கண்ணில் உள்ளிருக்கும் தண்ணீரை எல்லாம் வெளியில் பிதுக்கி கொண்டு வருவார். சத்தமும் பெரிதாக வரும்படி செய்வார். இந்த இடத்தில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு நின்று பார்ப்பார். முடிவில் அந்த உயர் அலைவரிசையில் இருந்து படியில்  இறங்குவது போல சத்தமே இல்லாமல் கீழே இறங்குவார் , மலையில் நீயூட்ரலில் இறங்கும் ஒரு ஜீப் போல. பின்னர் ஒரு இடத்தில் டிரைவர் கியர் போடும் போது விம்மும் வண்டி போல் விம்மி திரும்பவும் சம தளத்தில் ஆரம்பிப்பார். மூக்கில் இருந்து வரும் நீரை பிடிக்க நாக்கை ரெடியாக வைத்தே இருப்பார். ஒன்னும் முடியாத நேரத்தில் எழுந்து நடந்தபடியே கொஞ்சம் அழுது பார்ப்பார். முடிவில் பக்கத்து வீட்டு நாயைப் பார்த்து , ஸ்தம்பித்து , அழுகையை ...

கம்பராமாயணம் - 1 - காடு

கம்பராமாயணம் - 1 - காடு  சமீபத்தில் படித்த ஜெயமோகனின் காடு நாவல் தான் என்னை கம்பரைப் பற்றி எண்ணச் செய்தது. கதை முழுதும் கிரி என்பவனைச் சுற்றியே நடக்கிறது. முழுக்கதையும் காட்டிலேயே நடக்கிறது. வீட்டிலிருந்து பிழைப்பு தேடி மாமாவுடன் கால்வாய் (கல்வெர்ட்),  ரோடு போடும் கான்ட்ராக்ட் வேலைக்கு மேற்பார்வையாளராகச்  செல்கிறான். இதைப் படித்தபின் அருகில் இருக்கும் பெண்களில் எப்போது நீலி தோன்றுகிறாள் என்று தெரிகிறது. இவரையோ இன்னொரு நீலி காட்டிற்குள் கட்டிப்போட்டு விடுகிறாள். ஒரு பெண் அன்பால் நீலியாய், பித்தனாய் ஆக்கினாள். இதன் மறுமுனை மனைவி இயலாமையின், வெறுப்பின் உச்சத்தில் நீலியாகிறாள். மாமா இறந்து போய் பின் தொழில் சரிந்து , சாப்பிட வழியில்லாமல் , சரிவிலே வீட்டிலே இருக்க முடியாமல், இவர் தினமும் நாகராஜா கோவிலில் போய் உட்கார்ந்து,  சும்மா இருந்து பொழுது கழிக்கிறார். ஒரு நாள் காலையில் கோவிலுக்கு புறப்பட்டு  போகும்போது மனைவி பேசுவது குத்தி விடுகிறது. பீஸ் கட்டணும் என்கிறாள் . இவன் கேட்காமல் செல்கிறான். ஒரு தாசியா போகவும் வழி இல்லயே என்கிறாள். இத்தனை நாள் குத்தல் பேச்சை கேட்டவர் ...