Skip to main content

Posts

Showing posts from May, 2023

சைக்கிள் பதிவுகள் -5 - சாலைப்பறவைகள்

வாரத்தில் இரண்டு நாட்கள் காலை 9:30 க்கு மீட்டிங் இருக்கிறது . கொஞ்சம் கிளம்ப தாமதம் ஆனால் சைக்கிளை விரட்ட வேண்டியுள்ளது. சைக்கிளை விரட்டு நம்மை விரட்டுவது தான். டீக்கு நிறுத்தாமல் போவது போன்ற சமரசங்களுடன் சென்று நேரத்தில் சேர்வேன். இது கோடை காலம் ஆதலால், உடுப்பை மாற்றி , கொஞ்சம் மேக்கப் முடித்து தான் உள்ளே செல்ல முடியும்.   அன்று நான் சென்று கொண்டிருக்கும் போது, முன்னே ஒரு பெரியவர் ஹீரோ ஹோண்டா splendor-ல் போய்க்கொண்டிருந்தார்.  splendor -ஐ இப்போது vintage என்றே சொல்ல வேண்டும். இவரைப் போல் ஆட்கள் இல்லாவிட்டால் , வண்டிகளுக்கென்று வேறு ம்யூசியம் உண்டா என்று தெரியவில்லை. பின்னால் இருந்து அவர் அணிந்து இருக்கும் கண்ணாடி சட்டம் தெரிந்தது. அரைக்கை சட்டை, அடர் பழுப்பு கால்ச்சட்டை. பாட்டா தோல் செருப்பு, இதுவும் இப்போதெல்லாம் வருவதில்லை. தேடித்தான் வாங்கியிருப்பார். நேராய் நிமிர்ந்து ஒரு தேர்ந்த சாரதி போல் ஒட்டிச் சென்று கொண்டிருந்தார். அவர் பார்வை முழுதும் சாலையிலேயே இருந்தது.  நாம் நகரத்தின் மையத்திற்குள் செல்லச் செல்ல சாலையில் பள்ளங்களின் வீரியம் குறைந்த வண்ணம் இருக்கும். வீ...

வாழ்வின் மெய்யறிதல் : பண்பு எனப்படுவது (அ) மனிதன் என்பவன்...ஆர்தர் ஷோப்பனோவர் கட்டுரைகள் -3/1

சென்ற பகுதியில் ஒருவரின் தனிப் பண்பு என்பது அவரிடம் இருக்கும் செல்வத்தையும், புகழையும் விட மகிழ்ச்சிக்கு எவ்வளவு அவசியம் என்று அறிந்தோம். அதுவே அவரை இறுதி வரை தொடர்ந்து வரும். இதுவே பார்க்கும் விஷயங்களில் நிறங்களை உருவாக்கும். ஒருவர் பாரிஸில் மகிழ்ச்சியாய் இருந்தேன் என்று சொன்னால், உண்மையில் இதன் பொருள் என்ன?. இவர் பாரிஸில் 'தான்' மகிழ்ச்சியாய் இருந்தார் என்றே சொல்கிறார். பாரிஸ் என்ற  இடம் இரண்டாம் பட்சம், 'அவரே' முதல் இடம். வாயிலே புண் உள்ள ஒருவருக்கு அமுதமே ஆனாலும் சுவை இருக்காது. வாழ்வில் மகிழ்வும், துயரமும் அதை சந்திக்கும் விதத்திலும், அது எவ்வளவு தூரம் நம்முள் செல்கிறது என்பதிலேயே அடங்கி இருக்கிறது. இவ்விஷயம் ஒன்றுதான் நம் மகிழ்ச்சியை நேரடியாகப் பாதிக்கும். மற்ற இரண்டும் (பேர் , புகழ்)   மறைமுகமாகவோ , மற்ற பொருளின் வழியோ  அல்லது பிற மனிதர்களின் வாயிலாகவோ தான் நம்மை அடைய முடியும். மகிழ்ச்சி குணம் சார்ந்து இருப்பதனாலேயே தான் பிறரிடம் பார்க்கும் நல்ல குணங்கள் நம்மை பொறாமை கொள்ள வைக்கின்றன. நம் கெட்ட குணங்களை பிறரிடம் இருந்து மறைக்க வேண்டும் என நினைக்கிறோம். ...

அசைபோடுதல்

இதில் வந்த 'rumination' என்ற வார்த்தை தான் என்னை  இப்புத்தகத்தை( Stop Overthinking : Nick Trenton ) படிக்கத் தூண்டியது. இந்த வார்த்தை தான் எருமை மாட்டை நினைக்க வைத்தது. அப்பா எப்போதாவது கடிந்து கொள்ளும் போது 'எருமைப் பால் குடிச்சு வளந்தா?' என்பார். இல்லை 'எருமைமாட்ல மழை பெஞ்ச மாதிரி' என்பார். பாட்டி வீட்டில் மாடுகள் உண்டு. தாத்தா மழை வந்தால் எப்போதும் பசு மாடுகளை உள் கொட்டத்தில் பிடித்துக் கட்டுவார். ஆனால் எருமையை வெளியேயே நனைய விட்டு விடுவார். என்ன மழைக்கும் எழுந்து கூட நிற்காது. அதிக பட்சம் கண்களை உருட்டிப் பார்க்கும். வலது பக்கம் தாத்தாவின் வைக்கோல் போரும் , எதிர்த்தாற்போல் பக்கத்துக்கு வீட்டு மாடுகளும் , வைக்கோல் போரும் இருக்கும். இரண்டு வைக்கோல் போர்களின் நடுவே உள்ள வெற்றிடத்தை பார்த்தவாறு அசை போட்டவாறே இருக்கும். பசுமாடு தோலின் மேல் கொஞ்சம் தண்ணீர் விழுந்தால் தோலை மட்டும் தோகையைப் போல் சிலிர்த்து , வாலை ஒரு முறை ஒடித்து தன் முதுகில் லேசாய் அடித்துக் கொள்ளும். எருமை தோல் சிலிர்ப்பது அரிது  ,  அதைப் பார்ப்பது அதிலும் அரிது.      அதிகாலையில் மாடுகளை தெரு...

வாழ்வின் மெய்யறிதல் : அறிபவர் என்பவர்...ஆர்தர் ஷோப்பனோவர் கட்டுரைகள் -2

அறிபவர் என்பவர்...                                                 அரிஸ்டாடில் வாழ்வின் நமக்கு நடப்பதை மூன்றாகப் பிரிக்கிறார். 1.நமக்கு வெளியில் இருந்து வருபவை  2.மனதில் நடப்பவை  3. உடலில் நடப்பவை  நான் பார்த்த வரை எல்லா மனிதர்களையும் பின்வரும் மூன்று வகையில் வேறுபடுத்திப் பார்க்கலாம். (1). அந்த மனிதர் யார் : ஒருவரின் ஆளுமை என்ன என்பது இதில் அடங்கும். உடல்நலம், அவரின் பலம்,அழகு,மன வலிமை, அவர் போற்றும் அறம்,அறிவுத்திறன், கல்வி போன்ற எல்லாம் சேர்ந்தது. (2). அவரிடம் இருப்பது என்ன : சொத்துகள் போன்ற எல்லா வகையான உடைமைகள். (3). அடுத்தவர் பார்வையில் இந்த மனிதர் யார்: பிறர் கண்களில் இவர் எவ்வாறு அளக்கப்படுகிறார், இவரைப் பற்றி அடுத்தவர் அபிப்ராயம் என்ன, இவர் பட்டங்கள் யாவை, வரிசை என்ன, புகழ் யாது.  இதில் முதல் பத்தியில் வரும் விஷயங்கள் இயற்கையால் ஒவ்வொரு மனிதருக்கும் அளிக்கப்படுபவை. அவருடைய மகிழ்ச்சியோ , துக்கமோ மற்ற இரண்டு பத்தியில் வரும...

வாழ்வின் மெய்யறிதல் : ஆர்தர் ஷோப்பனோவர் கட்டுரைகள் -1

ஆர்தர் ஷோப்பனோவர் என்னும் பெயரை கடந்த ஒரு சில மாதங்களாக அங்கங்கு கேட்டுக் கொண்டே இருந்தேன். அண்மையில் போரும் வாழ்வும் படிக்கும் போது , டால்ஸ்டாய் இவரது எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டார் என்று அறிந்தேன். இவரும் ஒரு செல்வந்தராய் பிறந்து, தத்துவவாதியாய் ஆனார்.  ஒரு சில கட்டுரைகள் படிக்க ஆரம்பித்திருக்கிறேன். இப்புத்தகத்தைப் படித்தவுடன் ஏனோ தமிழில் மொழிபெயர்க்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது. ஒவ்வொரு அத்தியாயமாக மொழிபெயர்க்க ஆரம்பித்திருக்கிறேன்.  முன்னுரை  வாழ்வில் மெய்யறிவு என்றால் என்ன என்பதை பின் வரும் பக்கங்களில் விளக்க முயற்சிக்கிறேன். வாழ்வின் மெய்யறிதல் என்பதை உச்சமான மகிழ்ச்சியையும், வெற்றியையும் வாழ்க்கையில் அடைவது என்று சொல்லலாம். மகிழ்ச்சியான இருப்புக்கு தேவையான ஒரு கோட்பாடு.  இதை eudaemonolgy - (eudaemonism) என்று அழைப்பேன். நம் இருப்பு புறவயமானது போல் தோன்றினாலும், மெய்யறிவு பற்றிய கேள்வி என்றுமே அகவயமானதாகும். ஒருவர் இவ்வுலகில் வாழ்வதற்கும், இறப்பைப் பற்றி அறியவும், எவ்வாறு சந்தோஷமான இருப்பு முடிவில்லாமல் இருக்க முடியும் என்பதற்கும் மெய்யறிவைப் புரிந்த...