Skip to main content

Posts

Showing posts from March, 2023

கீழ் நோக்கி வளர்தல்

கீழ் நோக்கி வளர்தல்  மாலை இருள் வர ஆரம்பிக்கும் வேளையில் வீட்டிற்குள் இருப்பது ஏனோ  எப்போதும் ஒரு சிறு சோர்வை அளிக்கிறது . நேற்றும் அப்படித்தான். ஜன்னல்களின் கண்ணாடிகள் வழியே அடுத்த வீட்டு ட்யூப் லைட்டின் ஒளி கண்ணில் பட ஆரம்பித்திருந்தது  . அடுத்த வீட்டு டிவி-கள் தெளிவாய் தெரிய ஆரம்பித்தன . எங்கிருந்தோ கடைசிப் பறவை வானத்தைக் கடந்தது. அதை எதிர்த்து ஒரு பெரிய வௌவால் கூட்டம் அதைப் பார்த்தபடி கடந்து சென்றது .சில தெரு நாய்கள் தூங்க ஆரம்பித்திருந்தன. குழந்தைகள் அடுத்த நாள் தேர்வை எண்ணி படிக்க ஆரம்பித்து இருந்தனர் . ஒருவர் சத்தத்துடன் தெருவெங்கும் கொசுமருந்து அடித்தபடி சென்றார். மேகமே கீழ் இறங்கி வந்தது போல் இருந்தது. சாலையில் வண்டிகளின் விளக்குகள் தெரிய ஆரம்பித்தன. புத்தகம் ஒட வில்லை.  எங்காவது வெளியில் சென்று வருவது  என்று நீலாவைக் கூட்டி வெளியில் வந்தேன்.  வேறு எங்கு செலவில்லாமல் செல்ல முடியும்- கோவில்தான். அன்று ஒருவர் கேட்டார், இப்போதெல்லாம்  ஏன் கோவில்களில் கூட்டம். இடம் தான் பிரச்சனை. நேற்று 2 மணி நேரம் உட்கார இடம் இல்லாமல் ரோட்டில் நடந்தபடி, நின்றபடி ...

யுகாதி

இன்று யுகாதி , அப்பா யுகாதி அன்றுதான் பிறந்தார். இன்று கூடவே என்னுடைய பிறந்த நாளும் சேர்ந்து விழுகிறது. சென்ற ஜனவரி 21 அப்பாவின் நினைவு நாள். இரண்டு வருடங்கள் கடந்து விட்டன.  அன்று வீட்டிலிருந்தே வேலை பார்த்தேன். அன்று பள்ளிக்கூடத்தை விட்டு வந்த ஸ்ரீ 'அப்பா இன்னைக்கு ஜனவரி 21, என்ன நாள்னு தெரியும்ல'  என்றபடி , பின்னால் புத்தகப் பை , ஒரு கையில் நீளமான உறுமி  மேளக்காரர்கள் சுமக்கிற மாதிரி ஒரு வகை  புட்பால் பையும், மறு கையில் சாப்பாட்டு பையோடு படியில் ஏறினான். 'ஆமாடா , ஞாபகம் இருக்கு' என்றேன். ' அன்னைக்கு நீ அழுகவே இல்ல...நான் வந்ததும் பாத்து சிரிச்ச...இன்னைக்கும் கன்ட்ரோல் பன்னிக்கோ.. ' . வேறு யாராவது அன்று அப்பாவைப் பற்றி வீட்டில் பேசினால்  உஷ் என்று கை காட்டி 'டோன்ட் மேக் ஹிம் க்ரை' என்று பல முறை சொல்லிக் கொண்டே இருப்பான். ஒரு முறையேனும் நான் அழுவதை பார்க்க காத்துக்கொண்டிருக்கிறான்.  நான் அன்றிலிருந்தே அப்பாவைப் பற்றிய நினைவுகளை தொகுத்து எழுதி வைக்க வேண்டும் என்று நினைத்தபடி இருந்தேன். மேடமோர்போசிஸ்-ல் வருவது போல் , நாம் இல்லாத இடத்தில் நம்மைப் பற்றிய நி...

சைக்கிள் பதிவுகள் -4 - வசந்த ராணி

இன்று திங்கள் கிழமை, கொஞ்சம் கடினமான நாள். எழுந்தவுடன் வேலையைப் பற்றிய நினைப்பு வந்து மனதை மிரட்டும். அடுத்து சரியாக தூங்கி முடித்தோமா என்ற கவலை. ஒன்பதரை மணிக்கு மீட்டிங், அப்போ எவ்வளவு முன்னால் கிளம்ப வேண்டும், அதற்குப் பின் நாளில் என்ன செய்து முடிக்க வேண்டும் போன்ற எண்ணங்கள் தலகாணியிலேயே துவங்கி விடும். ஜன்னல் வழி நூலாய் வர ஆரம்பிக்கும் பகலாகும் இருட்டைப் பார்த்து , இது இன்னமும் கொஞ்சம் நீளாதா என்றே நினைக்கத்  தோன்றும். அன்றைய தினம் உங்கள் தலையணை அடியில் உங்களுக்காக மடித்து வைக்கப் பட்டுள்ளது, இன்று புதிதாய் பிறந்தோம் போன்ற சிந்தனைகள் வரவே வராது. இப்படி இன்றைய நினைப்பு போய்க் கொண்டு இருக்கும் போதுதான், 1000-ம் மணி படிப்புக்காக புத்தகத்தை எடுக்கச்  சென்றேன். (தினம் ஒரு மணி காலைப் படிப்பு முயற்சி). ஸ்ரீ தனது படுக்கையில் இருந்து புரண்டு இருந்தான் . இரவில் இவன் தூங்குவதற்கு எல்லோரையும் அமட்டுவது என் வேலை. நேற்றும் அவ்வாறே நடந்தது . அம்மாவும் , அக்காவும், சிரித்து அவனை எழுப்பிய வண்ணம் இருந்தார்கள். இவனும் தலையைத்  தூக்கிப்  பார்த்த வண்ணம் இருந்தான். பொதுவாக முகம் இழுத்த...

மறுபிறவி

ஏனோ இரன்டு நாட்களாக புனர்ஜன்மம் என்ற வார்த்தை வந்து கொண்டே இருந்தது. இந்த வார்த்தை ஒரு கணம் தோன்றும் , புளகாங்கிதமாய் ஆகி, கொஞ்சம் நெஞ்சு கனத்தது போல் மறையும். ஆனால் இது இவ்வாறே முடியவேண்டியதாய் இருந்திருக்கிறது. இவ் வார இறுதி நாட்கள் மதுரையில் . ஏனோ பெங்களூரை விட்டு வெளியே வந்தால், மக்கள் கஷ்டப் படுவது போலேயே தோன்றும். எல்லோரும் நன்றாகவே இருக்கிறார்கள் என்று உள்குரல் மட்டுப்படுத்தும். இந்தக் குரல் இல்லையென்றால் பை காலியாகிவிடும் .  இன்று மாலை நேர ஒரு சிறு ஊர் சுற்றல்.  நிறுத்தம் 1 முதல் 8 வரை , வட்டப்பாதை.  டீ பார்சல் வாங்கி கொண்டிருந்த இளைஞர்  மொபைல் போன் கடை வைத்து இருக்க வேண்டும். டீ மாஸ்டர் பத்தாயிரத்துக்குள் ஒப்போ  கிடைக்குமா என்றார். இளைஞர் உதட்டைப் பிதுக்கினார், ரியல் மீயாச்சும் வருமா என்றார். டீயை குடித்துவிட்டு கடையைக் கடந்து போகும் போது, ஒரு தாய் மடியில் குழந்தையுடன் அமர்ந்து பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். பொதுவாக இங்கு அனுமதிக்க மாட்டார்கள். குழந்தையின் இரு கால்களிலும் தடித்த மாவுக்கட்டு போட்டு கட்டப் பட்டிருந்தது.  குழந்தை தூங்கிக் கொண்ட...