Skip to main content

Posts

Showing posts from January, 2023

பெங்களுரு கட்டண உரை - கூட்டத்துடன் தனித்திருத்தல் - ஜெயமோகன்

பெங்களுரு கட்டண உரை - கூட்டத்துடன் தனித்திருத்தல் https://www.jeyamohan.in/பெங்களூரு-கட்டண-உரை-ஜனவ/  முதல் முறையாக கட்டண உரையைக் கேட்கும் வாய்ப்பு அமைந்தது. இதைப் பற்றி தங்கள் தளத்தில் கடிதங்கள் படித்திருக்கிறேன். இப்போது இதை இங்கே மொத்தமாக தொகுத்துக் கொள்கிறேன். மிக மிக அடர்த்தியான உரை, ஜெயமோகன் கொடுத்த மேற்கோள்களையும் , புத்தகங்களையும் இனிமேல் தான் படிக்க வேண்டும்.   பகுதி 1: நாம் இங்கே புது சிந்தனைகளை எவ்வாறு உருவாக்குவது, ஏன் இப்போது உருவாக்கமுடிவதில்லை, ஏன் மேற்கத்திய சிந்தனை புதியதை உருவாக்குகிறது என்பது முதல் பகுதி உரையின் சுருக்கம்.  எடுத்துக்காட்டாக ஆத்மா/soul மற்றும் பிரக்ஞை/consciousness என்ற இரு சொற்களை எடுத்து ஐரோப்பிய சிந்தனை முறையை , அதில் மெட்டாபிசிக்ஸ்(மீபொருண்மை) வெளியேறியதை விளக்கினார். ஆத்மா என்பது ஒரு கற்பனை,மூட நம்பிக்கை, நிரூபணம் இல்லாதது. இது soul /existence என்று ஒரு ஐரோப்பிய மனம் மொழி பெயர்ப்பதினால் வருவது . இங்கே ஆத்மா ஒரு உருவகம், existence இல்லை. Logical positivism, pragmaticism , objectivism - புறவயவாதம் இவை யாவும் ஐரோப்பிய ...

சாயாவனம் - சா.கந்தசாமி , அழித்தலின் கதை

அழித்தல் என்பது இப்போது இன்னும் பல மடங்கு வேகமாகி இருக்கிறது. சில நாட்கள் முன்பு ஒரே ஒரு தனி புல்டோசர்  தர்மபுரி நெடுஞ்சாலையில் பல கிலோமீட்டர் தூரத்திற்கு பள்ளம் தோண்டியிருந்தது. ஓட்டுநர் மட்டும் வேலை பார்க்கிறார். இரண்டாவது மனிதரே வேலையில் இல்லை. இதே வேலை பல நாட்களுக்கு நூற்றுக்கணக்கான ஆட்கள் செய்வதை சில வருடங்கள் முன் பார்த்திருக்கிறேன். ஒரு பக்கம் வண்டிகளை மறித்து , கடப்பாரை , மண்வெட்டிகளை வைத்து செய்த வண்ணம் இருப்பார்கள். ஒரு சில கிலோமீட்டர்கள் வாரக்கணக்கில் ஆகும்.  அதே நாள் ஒரு ஐம்பது கருத்து அறுக்கும் இயந்திரங்கள் படை போல் போய்க்கொண்டிருந்தன.  ஒரு வனத்தின் அழிவையும் , அதை அழிப்பவனுடைய மனநிலையையும் துல்லியமாகச் சித்தரிக்கும் நாவல் சாயாவனம்.இது 1969-ல் வெளிவந்திருக்கிறது. மிகை உணர்ச்சிகளே இல்லாமல் இப்படி ஒரு அழிவைச் சித்தரிக்க முடியுமா ? மிக மெதுவாக சூடேற்றுவது  போல், வருடக் கணக்கில் மாத்திரைகளை உற்சாகமாய் முழுங்கி கடைசியில் புது வியாதிகளால் உயிர் இழப்பது போல.  சிதம்பரம் வெளி நாட்டில் இருந்து கிராமத்திற்கு வருகிறான். அவனுடைய அம்மா இவனுக்கு இரண்டு வயது ஆகும்ப...

சைக்கிள் பதிவுகள் -3 - பெங்களூர் -ஒரு ஜனவரி மாத காலை

 பெங்களூர் -ஒரு ஜனவரி மாத காலை  -விழித்து எழுந்தவுடன்  உள்ளங் கால் முதலில் டைல்ஸ்-ல் படும் தருணம்  -தோலில் விழும் அன்றைய முதல் துளி தண்ணீர்  --பிரிட்ஜ் கதவின் அன்றைய முதல் திறப்பு, முதல் இருமல், முதல் மூக்கு உறியும் ஒலி     -பால் பாக்கெட்டை அன்று கை தொடும் நேரம் -அன்றைய balcony கதவு திறப்பு...ரோட்டில் தெரியும் அமைதியில் எங்கிருந்தோ கத்தி  போல் பாயும் , ஒரே ஒரு ஆட்டோ எழுப்பும் நீண்ட ஒலி, எங்கோ சுவருக்குள் பிளாஸ்டிக் பைப்பில்  மோதும்  டாய்லெட் தண்ணீர், அடுத்த வீட்டின்  பாத்ரூம் flesh ஒலி, திறந்தவுடன் குழாய்த் தண்ணீர் சிங்க்-ல் எழுப்பும் ஓலம், சில மணித்துளி மழையும், இடியுமாய், மேல் வீட்டில் தரையில் இழுக்கப்படும்  நாற்காலி  - ஜனவரி ஒலிக்கான மாதமும் கூட.        -தவறி சைக்கிளின் சில்வர் பாகத்தில் கைகள் பட்டு கலையும் தூக்கம்   -உள்ளங்கையில், விரல்களுக்கிடையில் பரவிச் செல்லும் காற்று. உடம்பின் ஜன்னல்களும் , கம்பிகளும் -உரசும் உள்ளங்கைகள், ஊதும் வாய்கள் , கால்ச்சட்டைக்குள் ஒளியும் கைகள்  -வெள...

அஞ்ஞாடி - பூமணி , நூல் பதிவு

பூமணியின் அஞ்ஞாடி நாவலை ஒரு வரலாற்று புனைவு(Historiography) என்று வகைப்படுத்தலாம். ஏற்கனவே எழுதப்பட்ட வரலாற்றின் தரவுகளை மையமாக  வைத்து ,  வரலாற்றை கதை வழியாக ரத்தமும் சதையுமாக நம் கண்முன் கொண்டு வருவது. பூமணி நூல் எழுத பயன்படுத்திய தரவுகளைப்   பின் இணைப்பாக கொடுத்துள்ளார். எத்தனை நூலகங்கள், எத்தனை ஆவணக் காப்பகங்கள், நீதிமன்றங்கள், தேவாலயங்கள், எத்தனையோ கோயில்கள், பணியாளர்கள், கள ஆய்வுகள், அயல் நாட்டு பல்கலைக்கழக நூலகங்கள்,  இன்னும் எத்தனையோ தனி மனிதர்கள். இந்த நாவல் 1900 பக்கங்களுக்கு மேல் நீள்கிறது . இது எவ்வளவு பெரிய உழைப்பைக் கோரியிருக்கும் என்பதை நினைத்தே பார்க்க முடியவில்லை, ஆசிரியரின் உழைப்பிற்கு பெரிய வணக்கம் . நாவலின் கால அளவு 1860-களில் ஆரம்பித்து , 1984-ல் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்படும் வரை. சில இடங்களில் கதைக்கு வலுவூட்ட  ஒட்டு மொத்த வரலாறும் சொல்லப் படுகிறது ஒரு பிளாஷ் பாக் போல. கழுகுமலை பற்றி சொல்லும்போது , சமணர் வரலாறு , கழுவேற்றம் வருகிறது. விரிவான பாளையக்காரர்கள் வரலாறு சொல்லப்படுகிறது .  இக்கதையின் களம் இன்றைய தென் மாவட்டங்களின் ஊர்க...

1000 மணி நேர வாசிப்புச் சவால் - 2023

 https://www.jeyamohan.in/177556/ https://suneelwrites.blogspot.com/2019/04/1000.html https://suneelwrites.blogspot.com/2022/12/2023.html https://prabhumayiladuthurai.blogspot.com/2022/12/blog-post_21.html இந்த சவாலில் தலையைக் கொடுத்தாகிவிட்டது. உருண்டு கொண்டு இருக்கிறது, நல்ல படியாகவே. படித்த நேரத்தை , பக்கங்களை, புத்தகத்தை தினமும் பதிவு செய்ய வேண்டும். பார்ப்போம் இதுவும் ஒரு உடற்பயிற்சி போல் செய்துவிடலாம் என நினைக்கிறேன். இப்போதைய பிரச்சனையாக இருப்பது நேரம் அல்ல , கவனம் சிதறுவதே ஆகும்.

பகடையாட்டம் - யுவன் சந்திரசேகர்

Pagadaiyattam (Tamil)   கணிப்பொறியில் ஒரு பிரச்சனைக்கு தீர்வு காண(Problem Solving )  நிரல்களை(Program) எழுதியாக வேண்டும். நிரல்களை வடிவமைக்கும் போது போது FSM(Finite State Machine) என்று ஒரு உத்தியைக் கையாள்வார்கள். இது கொடுக்கப்பட்டுள்ள பிரச்னையை ஒரு வரைபடத்தினுள் கொண்டுவர உதவும்.  FSM என்பதை ஒரு நிலை இயந்திரம் என்று சொல்லலாம். ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ள நிலைகளைக்  கையாளும் ஒரு நிரலி. உள்வரும் ஒரு நிகழ்வை (input/event  ) கணக்கிலெடுத்து அடுத்த நிலைக்குச் செல்லும். உதாரணமாக நீங்கள் 'நின்றல்' என்ற ஒரு நிலையிலிருந்து 'உட்காருதல்' அல்லது 'ஓடுதல்' அல்லது 'நடத்தல்' என்ற ஏதாவது ஒரு அடுத்த நிலைக்குச் செல்ல முடியும். இது எது என்று இன்புட் தான் முடிவு செய்யும். மிகப் பெரிய செயலி என்பது எண்ணிலடங்கா நிலைகளையும், அவற்றை நகர்த்தும் நிகழ்வுகளையும் கொண்டிருக்கும். ஒரு தலை சிறந்த செயலி என்பது எவ்வளவு எதிர்பாரத நிலைகளைக் கையாள்கிறது என்பதிலேயே இருக்கிறது. ஆனால் இந்த எதிர்பாராத நிலையும், இதை எவ்வாறு கணக்கிலெடுத்து என்ன செய்வது என்பதையும்  யாரோ ஓருவர் யோசித்தோ அல்லது அனுபவித்...