Skip to main content

Posts

Showing posts from 2023

விண்ணில் ஒரு பறவை

விண்ணில் ஒரு பறவை  நேற்று பெங்களூர் தமிழ் சங்க கட்டிடத்தில் நடந்த கவிஞர் தேவேதேவனின் ஐந்து கவிதை நூல்கள் வெளியீட்டு விழாவிற்கு சென்றேன். தமிழ்ச் சங்க செயலாளர் பேசிக்கொண்டிருக்கும் போது உள்ளே நுழைந்தேன். 70 வருடங்களுக்கு மேலே சங்கம் செயல்பட்டு வருவதாகச் சொன்னார். பலருக்கு படிப்பு உதவியும் , பதிப்பு உதவிகளும் செய்து வருவதாக கூறினார். அல்சூர் அருகேயே பல வருடங்கள் இருந்தபோதும் இங்கு செல்வது எனக்கு இதுவே முதல் முறை. ஒரு சிறிய திருமண மண்டபம் போல் தோன்றியது . சுவர்களில் தீட்டப்பட்டிருந்த ஓவியங்கள் , மதுரைக் கோவில் சுந்தரேஸ்வரர் சுற்றுச்சுவர் திருவிளையாடல் ஓவியங்களை நினைவூட்டின. ஐவகை நிலங்கள் , அவற்றின் வாழ்க்கை முறை ஓவியமாய் வரையப் பட்டிருந்தது.  அபிலாஷ் தேவதேவன் கவிதைகளை அறிமுகம் செய்து பேசினார். அவர் கவிதைகளில் வரும் பறவை,வானம்,கூடு, மரம் ஆகியவை பற்றி பேசி , அவை எப்படி ஆன்மிக தளத்திற்கு அடிப்படையாய் அமைகின்றன என்று பேசினார். பக்திமரபின் நீட்சியாகவும்,ஆனால் ஒரு பக்தரல்லவராகவும் , மாற்றாக முழுவதும் பொருளியல் உலகில் சிக்காமலும் அவர் கவிதைகள் தனித்துத் தெரிகின்றன என்று சொன்னார். சாரு அ...

பெங்களூர் - ஒரு வரலாற்று வரைபடம் - 1

பெங்களூர் - ஒரு வரலாற்று வரைபடம் - 1 மிகவும் பரபரப்பான, தெற்கே ஓசூரையும் பெங்களூரையும் இணைக்கும் நெடுஞ்சாலையில் , இன்றைய பெங்களூரின் கோட்டைவாசல் என்று சொல்லத்தக்க சில்க் போர்டு மேம்பாலம் உள்ளது. ஏன் சில்க் போர்டு கோட்டைவாசல் என்றால் பிற ஊர்களில் இருந்து (குறிப்பாக பிழைப்புத்தேடி) வருபவர்களை இங்கு இறங்கச் சொல்லி உள்ளூர்க்காரர்கள் வந்து அழைத்துப்போவார்கள்.  இதே போல் பெங்களூர் வடபுறம் ஒரு கோட்டை வாசல் உண்டு. அதன் பெயர் ஹெப்பால் மேம்பாலம் என்று பெயர். இது கிளைச்சாலைகளாகப் பிரிந்து தும்கூர் , அனந்தப்பூர், மற்றும் இன்னும் பல ஊர்கள் வழியாக, ஒருபுறம் ஆந்திராவிலும் , இன்னொருபுறம் மேலும் கர்நாடகவினுள்ளும் செல்கிறது. முடிவில்  தக்காணப் பீடபூமி முழுவதும் விரிகிறது. மூன்றாவதாக மேற்கே மைசூரையும் பெங்களூரையும் இணைக்கும் மைசூர் மேம்பாலம். இறுதியாய் , கிழக்கே திருப்பதி, சென்னையை இணைக்கும் ரோட்டின், கே ஆர் புரம் மேம்பாலம்.  ஏன் மேம்பாலம் என்பதை மையத்தில் நிறுத்திச் சொல்ல வேண்டி இருக்கிறது என்றால், ஏறக்குறைய வரலாற்றின் முக்கால் பங்கில்  பெங்களூரும் வரலாறு ஏறி இறங்கிச் செல்லும் மேம்பாலம...

அடுத்த மூச்சு -2 - சீ... ஓட்டம்

https://muthuvishwanathan.blogspot.com/2022/12/blog-post_28.html மெது ஓட்டம் பற்றி மேலே இருக்கும் முந்தய பதிவு எழுதியபின் , 2023 ஆரம்பத்தில் ஒரு நான்கைந்து முறை வீட்டிற்கும் கர்மேலராம் ரயில்வே பாலத்திற்கும் 10கே ஓடிப்பார்த்தேன். இது முடிவில் ஒரு மாதிரி எதிர் திசையில் முடிந்தது. விவரம் கீழே. இப்போது இன்னொரு ஒரு புதிய துவக்கம். அதன் விவரம் அதற்கும் கீழே. Nike ஆப் கோச்சுகள் காதில் பேசிக்கொண்டே வருவார்கள். நமக்கு முதல் எட்டு எடுத்தால் என்ன நடக்கும் என்று ஏற்கனவே தெரிவதால் , அறியாமலே கால் தயங்கும்.  கோச் காதில் தன் குலமுறைமைகள் எல்லாம் சொல்லி, (ஒலிம்பிக் பதக்கம் உட்பட),  'முதல் அடியே வெல்லும் அடி ; வென்றவர்கள் எல்லாம் முதல் அடி எடுத்து வைத்தவர்களே' என்பார்.  நீங்கள் ஆப்பை ஆன்  செய்து முதல் அடி எடுத்தது உங்கள் எண்ணத்தை காட்டுகிறது என்பார். நம் கால் இன்னும் நகராது. அப்புறம் நமக்குள் ஒரு பெரியவர்   'என்னப்பா இவ்வளவு சொல்றாரே..இன்னுமா விளங்கள' என்பார் . நாமே நினைக்காத ஒரு கணம் கால் நம்மை மீறிச் செல்லும். சரி ஒரு வழியாக கட்டு அவிழ்ந்தது.மெல்லிய சூடு நெற்றியில் படர ஆரம்பிக...

ஒரு சனிக்கிழமை காலை

ஒரு சனிக்கிழமை காலை இப்போதெல்லாம் சனிக்கிழமை காலை, வாரநாட்களைவிட இன்னும் முன் எழ வேண்டியிருக்கிறது. வேறு என்ன, ஸ்ரீக்கு கால்பந்து பயிற்சி. ஐந்தே முக்காலுக்கு பள்ளியில் இருக்க வேண்டும். எலீட் கோச்சிங் என்று சொல்கிறார்கள். கிளம்புவதற்கு முன் கோச் நரம்பு புடைக்க 15 நிமிடங்கள் நின்றபடி பேசிக்கொண்டு இருந்தார். கீழே பையன்கள் பெரும்பாலும் கைகள் முட்டியை கட்டியபடி படி இருந்தனர். சிலர் நெளித்துக் கொடுத்து, அடுத்து படுக்க வழி பார்த்துக் கொண்டிருந்தனர். பின்னர் வண்டியில் திரும்பி வரும்போது,  'கோச்சு ரொம்ப நேரமா பேசினாரே , என்னப்பா சொன்னாரு ?" 'அது தியரிப்பா ' 'அதான்ப்பா என்ன சொன்னாரு ?' 'டி பிரீபிங் ப்பா'  '...' 'என்ன நல்லா நடந்துச்சு , என்ன ட்ரபாக்ன்னு  டிஸ்கஸ் பண்ணனும்...நான் போன மேட்சுல எல்லாரும் உயரமா ஒருத்தன பாத்து பயந்தோம்ன்னு சொன்னேன்..அதான் தோத்தோம்ன்னு சொன்னேன்...கோச் ஆமான்னு சொன்னாரு   ' 'பேச்சு சரி ...நல்லா ஓடி விளையாடணும்ப்பா...இடுப்புல கை வைச்சு நடுவுல நின்னுக்கிட்டே இருக்கக்  கூடாது... ' 'ஆமப்பா ...தியரிய விட ப்ராக்டிகல் த...

புளியுப்புக் கரைசல்

வெண்முரசு நீர்க்கோலம் படித்துக்கொண்டிருக்கிறேன். பாண்டவர்களின் விராட பருவமும் , நள தமயந்தி கதையும் பிணைந்து சென்று கொண்டிருக்கிறது.  நளனை பீமன் பாதி , தருமன் பாதி என்று எண்ணிக்கொண்டேன். எவ்வாறு பிறர் அறியாமல் மாறுவேடம் பூணுவது என்றபோது , தமனர் அவர் முனிநிலையில் பாண்டவர்க்கு சொல்லும் சொற்கள் மிக ஆழமானவை. மாற்றுருவை வெளியே இருந்து கொண்டுவர முடியுமா? உள்ளம் மாறாமல் உடல் மட்டும் மாறினால் ஆகுமா?  நம் ஒவ்வொருவரிலும் பல ஆளுமைகள் குடிகொண்டுள்ளன. நாம் நாமாகவே ஒன்றை மட்டும் எழுப்பி முன்னதாக வைக்கிறோம். மற்றவைகளின் மேல் அது ஏறி அமர்ந்து கொள்கிறது. நம் உடலும் உள்ளமும் அதுவாகவே ஆகிறது. எனவே , மாறுவேடம் பூண வேண்டியபோது, நமக்குள் பின்னால் இருக்கும் ஆளுமையை முன்னால் எழச்செய்தால் நடிக்க வேண்டியதில்லை. அது உள்ளே இருப்பதால்  பயிலவும் வேண்டியதில்லை.  இன்னும் மேலே சென்று , அடுத்தவரை தனக்குள் கீழே ஆழத்தில் புதைபட்டுக்கிடக்கும்  ஆளுமையை வாயால் சொல்ல வைக்கிறார். பீமன் விராடபுரியில் அரண்மனைத்  அடுமனைத் தலைவனாகிறான்.  திரௌபதி தருமனை சகுனி என்கிறாள் . தருமன் அவளைச் சேடி என்கிறான...

ஒரு தொழில்நுட்ப உரசல்

 ஒரு தொழில்நுட்ப உரசல் தொடுதிரை என்னும் கல்பற்றா நாராயணன் கவிதை. ஒரு அப்பா டச் ஸ்கிரீன் திரையில் தடுமாறுவதையும் , அவர் பையன் நீரில் நடக்கும் கிறிஸ்துவைப்போல் தொடக்கூட இல்லாமல் திரையில் கைகளால் நடந்து செல்கிறான். அழுந்தக் கால்பதித்தே நடந்து பழகிய அவர் வாழ்வு நம் கண்முன் வருகிறது. பலமே தேவையில்லாத ஒரு வாசலின் முன் தனியனாய் வந்து நின்று இருக்கிறார்.     "காய்த்துப்போன விரலிருந்தும் எத்தனை அழுத்தியபோதும் செயல்படவில்லை. இது தொடுதிரை அப்பா மெல்ல தொட்டாலே போதும் அழுத்தவே வேண்டியதில்லை சொல்லப்போனால் தொடக்கூடவேண்டியதில்லை இதோ இப்படி அவன் விரல் நீரின்மேல் ஏசு போல நடந்தது அவன் விரும்பியபடி செயல்பட்டன எல்லாம் உலகம் எனக்கு வசப்படாமலிருந்தது இதனால்தானா? நான் தேவைக்குமேல் அழுத்திவிட்டேனா? " ... மேல்தளத்தில் எடையில்லாமல் நகர என்னால் இயலவில்லை முதல் அடியிலேயே நான் மூழ்கினேன் பூ விரிவதை கண்டதில்லையா செடி அழுத்துகிறதா என்ன? ஆனால் நான் பழுதடைந்த மின்விசிறிபோல ஓசையிட்டபடி மலர்ந்தேன் நெற்றி வியர்வையை கொதிக்கவைத்து என் அப்பங்களை வேகவைத்தேன் அது ஐந்தாயிரம்பேருக்கல்ல ஐந்துபேருக்கே போதவில்லை. என் ...

மஹாலயம்

சில வருடங்களுக்கு முன் ஏனோ எங்காவது மஹாளயம் என்ற வார்த்தை கேட்டால்  , எனக்கு உடனே பிரளயம் என்ற சொல் மனதில் ஓடும். ஜெயகாந்தன் பிரளயம் என்று ஒரு கதை எழுதியிருக்கிறார். 'சென்னையில் ஒருமுறை வந்த வெள்ளத்தின் போது நிகழ்ந்த அலங்கோலங்களை, மனிதனின் சிறுமைகளை, 'கொடைவள்ளல்'களின் மான வெட்கமற்ற தற் பெருமைச் சவடால்தனங்களைக் கண்டபோது என் மனத்தில் ஏற்பட்ட கைப்பு உணர்ச்சியில் எழுந்தது' என்று அவரே சொல்கிறார். ஆரம்பமே அம்மாசிக் கிழவனுடைய வளர்ப்பு மகளுக்கு திருமணம் செய்து வைக்கும் முதலாளியின் பையன். மாப்பிள்ளை சின்னான் அவர் வீட்டில் பிரைவேட் ரிக்சா ஓட்டுபவன். 20 ரூபாய் பணம் , ரெண்டு நாள் லீவு , அடுத்த நாள் கல்யாணம். அம்மாசிக் கிழவன் இந்தச் சேரியில் விதி விலக்கு, மனிதர்களுடன் ஒட்டவில்லை. குழந்தைகளுடன் தான் அவனுக்கு மகிழ்ச்சி இருக்கிறது. ஆனாலும் அவன் செல்லும் வழியெல்லாம் மனிதர்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள். குழாயடியில் , பாயை விரித்து படுக்கும் இடத்தில் ,பாயை கையில் எடுத்து படுக்கப் போகும் வழியில் மனிதர்கள் முளைத்துக் கொண்டே இருக்கிறார்கள். எல்லோரிடமும் பெரியவர் பேசியபடியே செல்கிறார், கடைச...

சைக்கிள் பதிவுகள் - 7 - வெள்ளிவீழ்த் தாரைகள்

வெள்ளிவீழ்த் தாரைகள் கடந்த சில நாட்களாக சொல்லி வைத்தாற்போல் மாலை ஐந்தரை ஆறு மணிக்கு மழை பெய்கிறது. ஏரியைச்  சுற்றி  நடைப்பயிற்சி ஆரம்பிக்கும் போது எல்லாம் சரியாய் இருப்பது போல் இருக்கிறது. பாதி சுற்றில் இருக்கும் பாலம் அருகில் நின்று பார்த்தால், மழைக்கடவுளுக்கு வயிறு கலங்குவது போல் வடமேற்கு  மூலையில் கரு மேகங்கள் திரள ஆரம்பிக்கும் - வீறு அணிந்தவன் மேனி நிற மேகங்கள். தென் கிழக்கு மூலையில் இன்னும் வெள்ளை மேகங்கள் இருக்கும் - நீறு அணிந்த கடவுள் நிறத்த வான்.  இன்னும் கால்வாசி முன்னகரும் முன், ஒரு சில கனமான துளிகள் உடம்பில் தெறித்து விழும். கண்டிப்பாக புது வழுக்கையில் ஒரு சில துளிகள் படும். பட்டதும் காதில் ஒரு தகர ஒலி அதிர்வுகள்  ஏற்பட்டு, மூக்கினுள் எதோ இறங்குவது போல் இருக்கும். நடு வழியில் இருக்கும் முதியவர்கள் 'அரே , பாப்ரே...' என்று  முன்னால் போவதா , பின் வாங்குவதா என்று பேசிக்கொள்வார்கள். கொஞ்சம் மழை கியரை மாற்றியபின் அங்கிருக்கும் ஒரு பத்து இருபது பேர் ஓட ஆரம்பிப்பார்கள். ஒரு நாய்க்கூட்டம் நிதானமாய் ஓட ஆரம்பிக்கும். கழுத்தில் கட்டப்பட்ட நாய்கள் சிலரை பிடித...

சைக்கிள் பதிவுகள் -6 - இருகால் புரவி

அன்று மாலையில் சைக்கிளில் திரும்பிக்கொண்டிருந்தேன் , அன்றே கிளம்பி ஊர்ப்பக்கம் செல்வதாகத் திட்டம். நம் சைக்கிளைப் பற்றி நமக்கு எப்பவுமே உயர்ந்த எண்ணம் தான். அவ்வப்போது பிரேக்கை முறுக்கி விட்டுக் கொண்டால் போதும். காற்று கூட இரண்டு மாதம் ஒரு முறை அடித்தால் போதும். ஆனால் இந்த மெக்கானிக்குகளிடம் இருந்து வண்டியைப் பாதுகாக்க வேண்டும். சென்ற முறை, சர்வீஸ் செய்யலாம் என்று போனேன். பொதுவாக கழுவிக்கொடுப்பார்கள். முதல் இரண்டு நாள் லகுவாக செல்வது போல் தோன்றும், அப்புறம் நினைப்பு சரியாகி விடும்.  ஆனால் அம்முறை  அவர் மின்கலத்தை நீரில் தோய்த்து , காயும் முன் சார்ஜ் செய்திருக்கிறார். உள்ளிருந்த அமிலக் கரைசல்  வெல்லமாய் வெளியே வந்து  ஒட்டி இருந்தது.  பழியை நம்மேல் மாற்றி, மின்கலத்தை மாற்றிகொள்ளுமாறும்,  அடுத்த முறை சர்வீஸ் ஓசியில் தருவதாகச் சொன்னார்.  வேறுவழி இருக்கவில்லை, தமிழ்நாட்டுக்காரர், ஒரு சண்டை, இறுதியில் இருவரும் பாதி வழி இறங்கி வந்து முடிந்தது. மெக்கானிக்கை வேலையில் இருந்து நிறுத்தி விட்டதாகச் சொல்லி, என் குற்ற உணர்வை இன்னும் அதிகப்படுத்தினார்.  பக்க...